Translate

செவ்வாய், மே 08, 2012

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும்-08-05-2012

                    சென்னை: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள், 11ம் தேதியுடன் முடிவடைகிறது. ஜூன் முதல் வாரத்தில், தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

ஏப்ரல் 4 முதல், 23ம் தேதி வரை நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 பேர் எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள், கடந்த 26ம் தேதியில் இருந்து, 66 மையங்களில் நடந்து வருகின்றன. 40 ஆயிரம் ஆசிரியர்கள், இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், 11ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், வழக்கமாக மே இரண்டாவது வாரத்தில் வெளியாகும். ஆனால், இம்முறை பிளஸ் 2 தேர்வு முடிவுகளே தள்ளிப் போயிருப்பதால், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளும் 20 நாட்கள் வரை தள்ளிப்போகின்றன.
இந்த ஆண்டு, ஜூன் முதல் வாரத்தில் தான் முடிவுகள் வெளியாகும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூன் முதல் தேதியன்றே பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பிளஸ் 1 சேர்க்கை மட்டும் தாமதமாகவே நடைபெற உள்ளன.
                                                                                      ---Dinamalar

சாதி, வருமான, இருப்பிட சான்றுகளை 6ம் வகுப்பிலேயே பெறலாம்!-08-05-2012

 
          சென்னை: எதிர்கால சிரமங்களைத் தவிர்க்க, 6ம் வகுப்பிலேயே மாணவர்களுக்கு சாதி, இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சட்டசபையில் முதல்வர் தெரிவித்ததாவது: பள்ளி மாணவர்கள் அரசு விடுதிகளில் தங்கிப் பயில்வதற்கும், பல்வேறு வகையான உதவித் தொகைகளைப் பெறுவதற்கும், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கும், சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ் போன்றவை தேவைப்படுகின்றன.
இத்தகைய சான்றிதழ்களை தேவையான நேரத்தில் பெறுகையில், மாணவர்களுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, அவர்களின் 6ம் வகுப்பிலேயே, இத்தகைய சான்றிதழ்களை பெறும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்படும்.
இதன்மூலம், மாணவர்கள் அந்த ஆண்டிலேயே மேற்கூறிய சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய திட்டத்தின் மூலம், 6ம் வகுப்பில் படிக்கும் சுமார் 12 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.
                                                                               - Dinamalar

திங்கள், மே 07, 2012

4G-Launched AIRTEL

Bharti Airtel launches 4G services in Bangalore
Bharti Airtel has launched broadband wireless access (BWA) services based on 4G technology in Bangalore followed by the recent inaugural launch of the services in Kolkata.

                 NEW DELHI: Bharti Airtel has launched broadband wireless access (BWA) services based on 4G technology in Bangalore followed by the recent inaugural launch of the services in Kolkata.
Airtel has also introduced 'Smartbytes' for 4G -- thus allowing customers to buy these add-on packs and use 4G services even after exhausting their monthly data limits.
"As seen the world over, the total data usage is exploding and is doubling each year to grow to nearly 3.6 hexabytes by 2014. With the launch of 4G, India will move from being a follower in technology to matching the world in this domain," said Sanjay Kapoor, chief executive officer (CEO) - India and South Asia, Bharti Airtel.
The service was inaugurated by Karnataka Chief Minister DV Sadananda Gowda.
A successor to the 3G and 2G families, 4G is expected to be five times quicker than 3G services. It would offer services such as high-definition mobile TV and video conferencing.
Airtel, which had bagged BWA spectrum in four telecom circles -- Kolkata, Maharastra, Punjab and Karnataka -- for Rs.3,314.36 crore in 2010, selected Chinese telecom equipment maker ZTE to manage its services in Kolkata.
The other players are yet to announce plans to rollout 4G services.
As part of an introductory offer by Airtel, customers subscribing to 4G services will now be given a cash back for the dongle -- thus bringing device-cost to customers zero and paving way for mass adoption of 4G services.
Airtel 4G is now also available in an all new 30 GB pack priced at Rs 2,999.

                                                                                                          -Times Of India

"survival-of-the-fittest "

         Darwinian "survival-of-the-fittest " laws continue to shape human evolution in the modern age, research led by the University of Sheffield has confirmed.

        A popular misconception is that humans stopped evolving when they took up farming and embraced monogamy. But evidence from detailed church records of almost 6,000 Finns born between 1760 and 1849 suggests this is not so.

       Researchers analysed data on economic status, births, deaths and marriages to examine four key natural selection factors: survival to adulthood, mate access, mating success, and fertility.

       They found that the Finns' natural selection opportunities were on a par with those seen in the wild. Differences in early survival and fertility were responsible for most of the variation in fitness, even among wealthy individuals. Strict adherence to monogamy did not limit the potential for natural selection.

    Dr Virpi Lummaa, from the University of Sheffield's department of animal and plant sciences, said: "We have shown advances have not challenged the fact that our species is still evolving, just like all the other species 'in the wild' . It is a common misunderstanding that evolution took place a long time ago, and that to understand ourselves we must look back to the hunter-gatherer days of humans ."

                                                                -Times of India

14-Thousands TET APPLICATIONS NOT FILLED IN PROPERLY

14 ஆயிரம் மனுக்களில் பெயர்களே இல்லை: தேர்வு வாரியம் அதிர்ச்சி-07-05-2012


         சென்னை: டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித்த 6.50 லட்சம் பேரில், 14 ஆயிரம் பேர், விண்ணப்பங்களில் தங்களது பெயர்களைக் கூட பூர்த்தி செய்யாமல் கோட்டை விட்டுள்ளனர்.
          மேலும், 28 ஆயிரம் பேர், பல்வேறு தவறுகளை செய்திருப்பதைக் கண்டு, ஆசிரியர் தேர்வு வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. விண்ணப்பங்களைக் கூட ஒழுங்காக பூர்த்தி செய்யாதவர்கள் எல்லாம் ஆசிரியர்களாக வந்து என்ன செய்யப் போகிறார்களோ என, ஆசிரியர் தேர்வு வாரியம் கவலை அடைந்துள்ளது.
ஜூன் 3ம் தேதி, டி.இ.டி., தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்காக 7.50 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டதில், 6.50 லட்சம் விண்ணப்பங்கள் மட்டும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களை, "ஸ்கேன்&' செய்யும் பணிகள், சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தன.
டி.ஆர்.பி., அதிர்ச்சி: விண்ணப்பங்கள், "ஸ்கேன்' செய்யப்பட்டு, பரிசீலனை செய்த ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆசிரியர்களாக இருப்பவர்களிலும், ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்தவர்களிலும், பல ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாதது தான், அலுவலர்களின் அதிர்ச்சிக்கு காரணம். குறிப்பாக, ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்தவர்கள் தான், அதிகளவில் தவறுகள் செய்துள்ளனர்.
      14 ஆயிரம் பேர்... : மொத்த விண்ணப்பதாரர்களில், 14 ஆயிரம் பேர், மிகவும் முக்கியமான தங்களது பெயர்களையே பூர்த்தி செய்யவில்லை. மேலும், 28 ஆயிரம் பேர், பல்வேறு தவறுகளை செய்திருப்பதாகவும், தேர்வு வாரியம் கண்டுபிடித்துள்ளது. பல ஆயிரம் பேர், முக்கிய பாடத்தை தவறாக குறிப்பிட்டுள்ளனர். இதேபோல், பல்வேறு தவறுகளை செய்திருக்கின்றனர்.
      நிராகரிப்பு இல்லை: விண்ணப்பத்தில் முக்கியமான தவறுகள் இருந்தால், விதிமுறைப்படி அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வேண்டும். இப்படி, பல தேர்வுகளில் தவறான விண்ணப்பங்கள் நிராகரிக்கவும் செய்யப்படுகின்றன. ஆனால், டி.இ.டி., தேர்வைப் பொறுத்தவரை, தவறான விண்ணப்பங்களை நிராகரிக்காமல், அந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது என, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விண்ணப்பக்கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை செலுத்திய நிலையில், விண்ணப்பங்களை நிராகரித்தால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைவர். முக்கியமாக, இதோடு அடுத்த ஆண்டுதான் டி.இ.டி., தேர்வு நடைபெறும். எனவே, ஒரு ஆண்டு வீணாகும்.
குறிப்பாக, கட்டாயக் கல்வி சட்டம் அமலுக்கு வந்த தேதிக்குப் பின் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்த அனைவரும், ஐந்து ஆண்டுகளுக்குள் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், தவறான விண்ணப்பங்களை நிராகரித்தால், ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு ஒரு ஆண்டு வீணாக நேரிடும். இதை மனதில் கொண்டு தான், தவறான விண்ணப்பங்களையும் ஏற்பது என, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு எடுத்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
     தேர்வு தள்ளி வைப்பா?: டி.இ.டி., தேர்வு தள்ளி வைக்கப்படுமா என்றும் தேர்வர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாடப்புத்தகங்கள் தற்போது தான் கிடைத்து வருகின்றன. பி.எட்., தேர்வுகள் ஒரு பக்கம், மறுபக்கம் டி.இ.டி., தேர்வுகள் என்பதால், தேர்வர்கள் தவித்து வருகின்றனர். ஆனால், டி.இ.டி., தேர்வுக்கான ஏற்பாடுகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் முழுவீச்சில் நடந்து வருகின்றன. எனவே, தேர்வு தள்ளி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிகிறது.

பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க ஆசிரியர்கள் கோரிக்கை-07-05-2012 

             சென்னை: "பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய
வேண்டும்' என, தமிழக ஆசிரியர் கூட்டணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில், கட்டாயக்கல்விச் சட்டம் குறித்த கருத்தரங்கு மற்றும் மாநாடு ஆகியவை, சென்னையில் நேற்று நடந்தன. இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்து, 1,000த்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பல்வேறு ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, மே 06, 2012

Thousands of Japanese marched to celebrate

Japan nuclear power-free as last reactor shuts
Thousands of Japanese marched to celebrate the switching off of the last of their nation's 50 nuclear reactors on Saturday.

TOKYO: Thousands of Japanese marched to celebrate the switching off of the last of their nation's 50 nuclear reactors on Saturday, waving banners shaped as giant fish that have become a potent anti-nuclear symbol.
Japan will be without electricity from nuclear power for the first time in four decades when the reactor at Tomari nuclear plant on the northern island of Hokkaido goes offline for routine maintenance.
After last year's March 11 quake and tsunami set off meltdowns at the Fukushima Dai-ichi plant, no reactor halted for checkups has been restarted amid public worries about the safety of nuclear technology.
"Today is a historical day," Masashi Ishikawa shouted to a crowd gathered at a Tokyo park, some holding traditional "koinobori" carp-shaped banners for Children's Day that have become a symbol of the anti-nuclear movement.
"There are so many nuclear plants, but not a single one will be up and running today, and that's because of our efforts," Ishikawa said.
The activists said it is fitting that the day Japan is stopping nuclear power coincides with Children's Day because of their concerns about protecting children from radiation, which Fukushima Dai-ichi is still spewing into the air and water.
The government has been eager to restart nuclear reactors, warning about blackouts and rising carbon emissions as Japan is forced to turn to oil and gas for energy.
Japan now requires reactors to pass new tests to withstand quakes and tsunami and to gain local residents' approval before restarting.
The response from people living near nuclear plants has been mixed, with some wanting them back in operation because of jobs, subsidies and other benefits to the local economy.
Major protests, like the one Saturday, have been generally limited to urban areas like Tokyo, which had received electricity from faraway nuclear plants, including Fukushima Dai-ichi.
Before the nuclear crisis, Japan relied on nuclear power for a third of its electricity.
The crowd at the anti-nuclear rally, estimated at 5,500 by organizers, shrugged off government warnings about a power shortage. If anything, they said, with the reactors going offline one by one, it was clear the nation didn't really need nuclear power.
Whether Japan will suffer a sharp power crunch is still unclear.
Electricity shortages are expected only at peak periods, such as the middle of the day in hot weather, and critics of nuclear power say proponents are exaggerating the consequences to win public approval to restart reactors.
Hokkaido Electric Power Co. spokesman Kohei Ofusa said Saturday's shutdown was proceeding as planned. Power generation was gradually being reduced, with all operations expected to end at 11 p.m. (1400 GMT), he said.
Yoko Kataoka, a retired baker who was dancing to the music at the rally waving a small paper Koinobori, said she was happy the reactor was being turned off.
"Let's leave an Earth where our children and grandchildren can all play without worries," she said, wearing a shirt that had, "No thank you, nukes," handwritten on the back.
                                                                             Courtesy Times of India.

GLOBAL WARMING STARTING IT"S DUTY

பனி ஏரி உடைந்து 10 பேர் சாவு; 60 பேரை காணவில்லை

            காத்மாண்டு, மே 5: நேபாளத்தின் வட மேற்குப் பகுதியில், இமயமலையின் உயரமான பகுதியில் அமைந்துள்ள பனி ஏரி உடைந்தது. இதனால் அப்பகுதியில் பாயும் சேடி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் நிகழ்வால் பொகாடா பகுதியில் உள்ள வீடுகள், பண்ணைகள், கால்நடைகள் ஆகியன வெள்ளத்தில் மூழ்கின. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 60 பேரைக் காணவில்லை.தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கஸ்கி மாவட்டத்தில் இந்த நதி பாய்கிறது. இதில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், மசாபுசாரே மலைமுகடில் அமைந்துள்ள சர்திகோலா கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது.ராணுவத்தினரும், காவல்துறையும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணியில் பயன்படுத்தப்படுகின்றன. நதிக்கரையிலிருந்து இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நதியில் நீர்மட்டம் மிகவும் உயர்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.இந்த வெள்ளப்பெருக்கில் 60 பேர் காணாமல் போயுள்ளனர். அதில் ரஷியாவைச் சேர்ந்த 3 சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்று ராணுவத்தினர் தெரிவித்தனர். நதிக்கரையோரம் நின்றிருந்த லாரிகளையும், பஸ்களையும் வெள்ளம் அடித்துச் சென்று விட்டது. அன்னப்பூர்ணா சிகரத்தின் கீழ் அமைந்துள்ள காராபானி கிராமமும் இந்த வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டது. இங்குள்ள இரண்டு பெரிய கட்டடங்களும், பல குடில்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.எந்தத் தாமதமுமின்றி மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் பாபுராம் பட்டாராய் உத்தரவிட்டுள்ளார். வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட இடத்தில் அன்னப்பூர்ணா, தவளகிரி, நீலகிரி ஆகிய சிகரங்கள் உள்ளன. இவற்றின் உயரம் 8000 ஆயிரம் மீட்டருக்கும் அதிகம் என்பதால் சாகச சுற்றுலாப் பயணம் செய்வோரை இப்பகுதி கவர்ந்திழுக்கிறது. சாகச சுற்றுலாவுக்கான சீசன் இன்னும் தொடங்கவில்லை என்பதால் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வரத்து குறைவாகவே உள்ளது.

சனி, மே 05, 2012

Minimum Balance is not must for S.B.A/C FOR S.B.I. Branches

                    ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது கிளைகளில் உள்ள அனைத்து சேமிப்பு கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு தொகை (மினிமம் பாலன்ஸ்) விதிமுறையை கைவிடுமாறு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 17ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை மறுஆய்வு நடந்தது. அதில் வங்கித் துறையின் பல அதிரடி மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, வீட்டு கடனை முன்கூட்டி திருப்பி செலுத்தினால் அபராத வட்டி கூடாது என்று அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக, 0 பாலன்ஸ் வசதியுடன் சேமிப்பு கணக்குகளை தொடங்க அனைவரையும் அனுமதிக்குமாறு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியது. அதன் தொடர்ச்சியாக, நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது கிளைகளுக்கு ஏப்ரல் 25ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி எல்லா வகையான சேமிப்பு கணக்குகளிலும் மினிமம் பாலன்ஸ் விதியை நீக்கி விடுமாறு கூறியுள்ளது. இதை உடனடியாக அமல்படுத்தவும், ஏப்ரல் 25ம் தேதிக்கு பிறகு மினிமம் பாலன்ஸ் குறைந்ததாக யாருக்காவது பணம் பிடித்திருந்தால் அதை  மீண்டும் அவர்களது கணக்கில் வரவு வைக்கவும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான கடிதங்கள் அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் எஸ்பிஐ தலைமை அலுவலகம் அனுப்பியுள்ளது. மேலும், இனி சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பாலன்ஸ் விதிமுறை கிடையாது என்று வாடிக்கையாளர்கள் எளிதில் பார்க்கும் வகையில் அறிவிப்பு பலகையில் இடம்பெற செய்யவும் எஸ்பிஐ வலியுறுத்தியுள்ளது.

குக்கர் சாதம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்



நவீன சமையல் உபகரணங்கள் வேலைப்பளுவை குறைக்க உதவினாலும், அவற்றால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் பற்றி அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதுண்டு. வாழ்க்கை முறை சார்ந்த பிரச்னைகளை அவை தரும் என புகழ்பெற்ற மருத்துவர்களே சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, ‘குக்கரில் சமைக்கப்படும் சாதத்தை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்’ என்கிற தகவல் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

‘‘லைஃப்ஸ்டைல் காரணமாக சமையலிலும் பெரும் மாற்றங்கள். ஆபீசுக்குப் போகிற அவசரத்தில் சீக்கிரம் எப்படி சமையலை முடிப்பது என கவலைப்படும் பெண்களுக்கு நவீன சமையல் உபகரணங்கள் பெரும் வரம் என்பதை மறுக்கமுடியாது. சமையலை எளிதாகவும் விரைவாகவும் செய்ய ஏராளமான பொருட்கள் வந்துவிட்டன. அதன் மூலம் செய்யப்படும் உணவுப்பொருட்களே பல நோய்களுக்குக் காரணமாகிறது’’ என்கிறார் லைஃப் ஸ்டைல் மேனேஜ்மென்ட்டைச் சேர்ந்த வயது நிர்வாக நிபுணர் டாக்டர் கௌசல்யா.

‘‘குக்கரில் சாப்பாடு செய்வது எளிதானதுதான். ஆனால், அதனால் உடல் பருமன், சர்க்கரை நோய் வரும் அபாயம் அதிகம் இருக்கிறது. வடித்து சமைக்கும் சாதத்தில் 30 முதல் 40 சதவிகிதம் மாவுச் சத்து (கார்போஹைட்ரேட்) குறைந்து விடும். ரத்த சர்க்கரை அளவை உடனடியாகவும் அது கூட்டாது. ஆனால், குக்கரில் சமைக்கும்போது அந்தச் சத்துகள் அப்படியே சாப்பாட்டில் முழுமையாக இருக்கும்.

குக்கரில் வேக வைக்கப்படுகிற அரிசியில் கஞ்சி (மாவுச்சத்து) நீக்கப்படுவதில்லை. அதனால் கலோரி, குளுக்கோஸ் அளவு அதிகம். திடீரென ரத்த சர்க்கரை அளவு கூடுவதற்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிதாக சர்க்கரை நோயை உண்டு பண்ணும் அபாயமும் இருக்கிறது. நார்ச்சத்து நிறைந்த, கஞ்சி நீக்கப்பட்ட சாதமே சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கும்.

அரிசி வேக எவ்வளவு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதோ, அந்த அளவுக்கு அது சாப்பிட நல்லது. குறைந்த நேரத்தில் வேகும் சாப்பாட்டால் பிரச்னைதான். அதிக நேரம் வெந்த சாப்பாட்டை ஒரு கப் சாப்பிட்டாலே வயிறு நிரம்பி விடும். வேகமாக தயாரான சாப்பாட்டை 2 மடங்கு எடுத்துக்கொண்டால்தான் வயிறு நிரம்பும். இப்படி வயிற்றுக்குள் உணவைத் திணிக்கத் திணிக்க பிரச்னைகளும் அதிகமாகும்.   எண்ணெய் வகைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தக்காலத்தில் செக்கில் ஆட்டிய எண்ணெயில் வைட்டமின் மற்றும் நார்ச்சத்து நிரம்பியிருக்கும். அது ஜீரணத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் உகந்ததாக இருந்தது. இப்போது அல்ட்ரா ரீஃபைண்ட் ஆயில், டபுள் சூப்பர் ரீஃபைண்ட் ஆயில் என நிறைய வந்து விட்டது. அதிகமாக ரீஃபைண்ட் செய்வதால் வைட்டமின் சத்துகள் குறைந்து விடும்.   சூடாக்கிய எண்ணெயையும் திரும்பத் திரும்ப பயன்படுத்தக்கூடாது. அந்த எண்ணெயால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகும் ஆபத்து இருக்கிறது. இதனால் வயிற்றுப் புற்றுநோய் வரும் அபாயமும் உண்டு.

பருமனும் ஏற்படலாம். முடிந்தவரை இவற்றையெல்லாம் தவிர்த்தல் நல்லது’’ என்கிறார் டாக்டர் கௌசல்யா. ‘‘நாம் பயன்படுத்தும் அரிசியும் சர்க்கரை நோய்க்கு ஒரு காரணம். 30 வருடங்களுக்கு முன் இருந்த கைக்குத்தல் அரிசி இப்போது இல்லை. இப்போது பாலீஷ்ட் ரைஸ், பாஸ்மதி ரைஸ், டபுள் ரீஃபைண்ட் ரைஸ் என எத்தனையோ வகை அரிசிகள். அரிசியை அதிகம் பாலீஷ் செய்து வெண்மையாக்குவது நல்லதல்ல. அப்படிப்பட்ட அரிசியில் நார்ச்சத்து குறைந்து, கலோரி அதிகமாகி, பருமனை அதிகமாக்கி சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கும்.

நாம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் பாதி ‘டீத் ப்ரௌன் க்ரோத்தன் ஃபுட்’. அதுல 60 சதவீதம் நியூட்ரிஷன் சத்துகள் இருக்காது. வெறும் டேஸ்ட் மட்டும்தான் இருக்கும். இந்தப் பொருட்களால் பருமன், இன்சுலின், ஹார்மோன், வயிற்றுப் பிரச்னைகள், முடி கொட்டுதல் என பல பிரச்னைகள் ஏற்படும்.  ஒரு நாளைக்கு 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் பயன்படுத்துவதுதான் ஆரோக்கியத்துக்கு நல்லது.

இப்போது உள்ள எண்ணெய்களில் கெமிக்கல் மாற்றம் ஏற்பட்டு, அவை இதய நோய்களை ஏற்படுத்தி விடுகின்றன. முன்பெல்லாம் செக்கில் ஆட்டிய எண்ணெய் ஒரு ஸ்பூன் பயன்படுத்தினால் போதும். இப்போதுள்ள எண்ணெய் பத்து ஸ்பூன்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இது கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி தேவையில்லாத நோய்கள் வர காரணமாகி விடுகிறது.   ஆக, ஈஸி என்று நினைப்பதே நமக்கு பாதகமாகி விடுகிறது. சமையலில் சில வகைகளை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அடிப்படையான சிலவற்றை அவசியம் கடைப்பிடித்தே ஆகவேண்டும்’’ என்கிறார் நாளமில்லாச் சுரப்பி நிபுணர் ஜெயஸ்ரீ கோபால். 
                                                                            Courtesy-Dinakaran.

வெள்ளி, மே 04, 2012

Tri-Semester Syllabus for the standards 1 to 8

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் இருந்து முப்பருவ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த பாடத்திட்டத்தின் கீழ் ஒரு பருவத் தேர்வுக்கு அதாவது காலாண்டு வரை 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் ஒரே ஒரு புத்தகத்தை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு புத்தகத்திலேயே 5 பாடங்கள் அமைந்திருக்கும். அரையாண்டுத் தேர்வுக்கு இரண்டாவது பருவப் புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அது முடிந்ததும் 3வது பருவப் பாடப்புத்தகத்தை எடுத்துச் சென்று படிக்க வேண்டும்.
பாடச் சுமையும், பாடப்புத்தகங்களின் சுமையும் குறைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ள முப்பருவப் பாடத்திட்டத்தின் சாராம்சம் குறித்து ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.1 முதல் 8ம் வகுப்பு வரையிலான முப்பருவப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பாடங்கள் குறித்து அறிந்து கொள்ள இங்கே கிளிக்செய்யவும்.

வியாழன், மே 03, 2012

அதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி

info.kalvisolai.com: அதிசயமாய் ஒர் அரசு தொடக்கப்பள்ளி: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இராமம்பாளையம் , காரமடை ஒன்றியம் மேட்டுப்பாளையம் வட்டம் , கோயம்புத்தூர்   மாவட்டம் . பள்ளி பற்றிய ...

புதன், மே 02, 2012

UGC EXTENDEDUPTO MAY FOURTH FOR EXAM

யூ.ஜி.சி நடத்தும் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதி தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே 4 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

02-05-2012 அன்று வெளியிட்டது
கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தகுதித்தேர்வு விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவுசெய்வதில் பட்டதாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனைக் குறித்து யூ.ஜி.சி.யின் தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு புதிய தலைமுறை விளக்கம் கேட்டது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிக்க முற்படுவதால் இணையதளத்தில் நெரிசல் ஏற்படுவதாக யூ.ஜி.சி விளக்கம் அளித்தது. இந்தப் பிரச்னை காரணமாக விண்ணப்ப தேதியை மே நான்கு வரை நீட்டிப்பதாகவும் யூ.ஜி.சி தெரிவித்தது. மே இரண்டாம் தேதிக்குள் வங்கி வரைவோலை எடுத்தவர்கள், ஆஃப்லைன் முறையில் விண்ணப்ப படிவத்தை எடுத்து, பின்னர் அதனைப் பூர்த்தி செய்து அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள தேர்வு மையத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் யூ.ஜி.சி தெரிவித்தது. விரிவுரையாளர் தகுதித் தேர்வை எழுத இதுவரை கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடக்க இருக்கும் இந்த தேர்வில் முதல் முறையாக பதிலை தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.