Translate

திங்கள், டிசம்பர் 26, 2011

VEERA SAVARKAAR


வினாயக் தாமோதர் சாவர்க்கர்


வினாயக் தாமோதர் சாவர்க்கர்
Savarkar3xt.jpg
வினாயக் தாமோதார் சாவர்க்கர்
பிறப்பு மே 28 1883
பாகூர், பிரித்தானிய இந்தியா
இறப்பு பெப்ரவரி 26 1966 (அகவை 82)
மும்பை, இந்தியா
வலீந்து ஏற்ற வலியில்லா மரணம் யூதனேசியா
தேசியம் இந்தியர்
வேறு பெயர்கள் வீர் சாவர்க்கர்
அறியப்படுவது இந்திய சுதந்திரபோராட்ட இயக்கம், இந்துத்வா
கல்வி பெர்குசன் கல்லூரியி, புனே, இளங்கலை பட்டம்
அரசியல் கட்சி இந்து மாகா சபை
சமயம் இறை மறுப்பாளர், இந்துத்வம்
வாழ்க்கைத்
துணை

யமுனா பாய்
பிள்ளைகள் மகன்கள் பிராபாகர் (குழந்தையிலேயே இறப்பு), விஷ்வாஸ் சாவர்க்கர், மகள் பிராபாத்-தாய் சிபுலங்கர் ( அவரின் திருமணத்திற்குப் பின்)
வினாயக் தாமோதர் சாவர்க்கர் (Vinayak Damodar Savarkar) (பிறப்பு மே 28, 1883, பகதூர்- இறப்பு பெப்ரவரி 26, 1966, மும்பை) இந்துத்வா வில் அதிக நாட்டம் கொண்ட இந்திய அரசியல்வாதியும் , சுதந்திர போராட்ட வீரருமான இவர் வீர் சாவர்க்கர் (துணிவுமிக்க சாவர்க்கர்) என அனைவராலும் அறியப்படுகிறார். இந்து தேசியவாதிகளின் மைய உருவமாகக் கருதப்படுகிறார். அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் ஆங்கில அரசால் சிறைச்சாலையிலிருந்து வெளியே வாழ அனுமதிக்கப்பட்ட பின்னர்,சாதி பேதங்களைக் களைதல் போன்ற சமூக சீர்த்திருத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். இவர் ஒரு இறை மறுப்பாளரும் கூட. இவரின் இறுதிகால வாழ்க்கை மாகாத்மா காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட பின்னணியுடன் கூடியது. பின்னர் நீதிமன்றம் இவர் குற்றமற்றவர் எனக்கருதி விடுதலை செய்தது.


 கல்வி மற்றும் புரட்சி
சாவர்க்கரின் புரட்சி அவரின் இந்தியா மற்றும் இங்கிலாந்தில் கல்வி பயிலும் பருவத்திலேயே துவங்கியது. அங்குள்ள இந்தியா இல்லத்தில் மாணவர்களுடன் சேர்ந்து அவினவ் பாரத் சங்கம் என்ற சுதந்திர இந்தியா சங்கத்தை உருவாக்கி சுதந்திரத் தாகத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்தினார். 1857 ல் ஏற்பட்ட இந்தியப் பிரிவினையை எதிர்த்து எழுதிய இந்திய சுதந்திரத்திற்கான போர் என்ற நூல் பிரித்தானியரால் தடை செய்யப்பட்டது. 1910 ஆண்டு இந்தியா இல்லத்தில் இருந்த புரட்சியியாளர்களுடன் தொடர்பினால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லும் வழியில் பிரான்சின் மார்செய்ல்ஸ் துறைமுகத்தின் அருகே தப்பிக்க முயன்றதால் 50 ஆண்டுகால சிறைத்தண்டணைக் கொடுக்கப்பட்டு அந்தாமான் சிற்றறைச் சிறைக்கு அனுப்பப்பட்டார். இச்சிறையில் இந்து தேசியவாதத்தை வெளிப்படையாக ஆதரித்து கட்டுரை எழுதினார். 1921 ல் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

 சிறந்த பேச்சாளர்

சாவர்க்கர் மிகச் சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவருடைய எழுத்துக்கள் பெரும்பாலும் இந்து அரசியலையும், சமூக ஒற்றுமையும் பறைசாற்றின. மேலும் சாவர்க்கர் இந்தியா இந்துக்களின் நாடு என்றும் அதை இந்து இராச்சியம் (இந்து ராஷ்டிரியா) என அழைக்க வலியுறுத்தினார். இதன் காரணமாக 1942 ல் அமைக்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு (குவிட் இந்தியா முழக்கம்) இயக்கத்தினை எதிர்த்தார். பிரிவினைக்கு ஆதரவளித்த இந்திய தேசிய காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாக நிகழ்ந்த காந்தி படுகொலையில் நீதிமன்றம் அவரை குற்றவாளியில்லை என்று விடுவிக்கும் வரை குற்றம்சாட்டப்பட்டவராயிருந்தார். அவரின் இறுதி காலங்களை இந்துத்வாவை தன் எழுத்துக்களின் மூலம் விரிவாக்குவதில் செலவிட்டார்.

 இறப்பு

பிப்ரவரி 26, 1966, யூதனேசியா (Euthanasia) என்ற மருத்துவ சொல்லால் அழைக்கப்படும் வலியில்லா மரணத்தை (கருணைக்கொலை என்றும் கூறுவர்.) வலீந்து (Voluntarily)ஏற்று இறப்பைத் தழுவினார். இவர் இறுதி மரியாதையில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இவர் பயன்படுத்தியப் பொருட்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

GREAT INDIAN INSPRITIONS


Leaders

Bhagat SinghIndia is a land of great political leaders who ruled the country effectively and also by protecting its national interest. It was not an easy task to accomplish, keeping in view the changes taking place in the world political scenario. Leaders like Pandit Jawaharlal Nehru, Lal Bahadur Shastri and Indira Gandhi Bose played an indispensable role in changing the perspective of world towards India. The manner, in which issues like border disputes, Kashmir and growing shortage of food grains were handled, they really deserve an honor. The far-sightedness and pragmatic characteristics of the leaders can be assumed from the fact that they framed the Constitution of India by inducting the best possible clauses of the world. They led the country from the front, without being showing any inclination to either of the power blocs. To know more about the political leaders of India, read the brief biography of the Indian political leaders.
Bal Gangadhar Tilak was a social reformer and freedom fighter. He was one of the prime architects of modern India and strongest advocates of Swaraj (Self Rule). He was universally recognized as the "Father of Indian Movement".

Bhagat Singh
Bhagat Singh was among the prominent revolutionaries who shaped the base of a grand national movement. Following his execution, on March 23, 1931, the supporters and followers of Bhagat Singh regarded him as a "Shaheed", "martyr".

Chandrasekhar Azad
A contemporary of Bhagat Singh, Chandrasekhar Azad was a born firebrand revolutionary. He engaged in a heroic battle against the British. His role was crucial in inspiring the others of his generation to participate in the national movement for freedom.

Gopal Krishna Gokhale
Gopal Krishna Gokhale was one of the pioneers of the Indian Independence Movement. Gokhale was a senior leader of the Indian National Congress. He was one of the most learned men in the country, a leader of social and political reformists and one of the earliest and founding leaders of the Indian Independence Movement.

Indira Gandhi
Indira Gandhi was, undoubtedly, one of the greatest political leaders of India. She was the first and only woman to be elected as the Prime Minister. She is also regarded as the most controversial political leader of the country for her unprecedented decision of imposing "a state of emergency".

Jawaharlal Nehru
Jawaharlal Nehru was the first Prime Minister of independent India. He was a member the Congress Party that led the freedom movement against British Empire. Nehru was one of the architects who had the opportunity to steer the newly freed-nation. He was also the chief framer of domestic and international policies between 1947 and 1964.

Lala Lajpat Rai
Lala Lajpat Rai immensely contributed in attaining independence the nation. He helped in establishing few schools in the country. He also initiated the foundation of Punjab National Bank. In 1897, he founded the Hindu Orphan Relief Movement to keep the Christian missions from securing custody of these children.

Lal Bahadur Shastri
He devoted his life for the pride and honor of the country. Shastri was regarded as man of principles. Lal Bahadur Shastri offered his resignation as Union Railway Minister; hours after he was made aware of a train accident that killed around 150 people.

Maulana Abul Kalam Azad
Indira GandhiMaulana Abul Kalam Azad was a renowned journalist of his time. Disturbed by his provocative articles, the British Government decided to deport him off Calcutta. Despite of his house-arrest and imprisonment, Maulana Abul Kalam Azad continued to write against the anti-people policies of the British Government.

Netaji Subhash Chandra Bose
Netaji Subhash Chandra Bose was a freedom fighter of India. He was the founder of the Indian National Army. During pre-independence period Netaji had visited London to discuss the future of India, with the members of the Labor party.

Dr. Rajendra Prasad
Rajendra Prasad was a great leader of the Indian Nationalist Movement and also one of the architects of the Indian Constitution. He was elected as the first President of Republic of India. Rajendra Prasad was a crucial leader of the Indian Independence Movement, who left his lucrative profession to participate in the nationalist movement of India.

Rajiv Gandhi
Rajiv Gandhi was one of the popular Prime Ministers of India. The developmental projects launched by him include the national education policy and expansion of telecom sector. Besides his achievement and subsequent popularity, Rajiv Gandhi also emerged as one of India's controversial Prime Ministers.

Sardar Vallabhbhai Patel
Vallabhbhai Patel was one of the great social leaders of India. He played a crucial role during the freedom struggle of India and was instrumental in the integration of over 500 princely states into the Indian Union. Despite the choice of the people, on the request of Mahatma Gandhi, Sardar Patel stepped down from the candidacy of Congress president.

Sarojini Naidu
Sarojini Naidu was truly one of the gems of the 20th century India. She was known by the sobriquet "The Nightingale of India". Her contribution was not confined to the fields of politics only but she was also a renowned poet. The play "Maher Muneer", written by Naidu at an early age, fetched a scholarship to study abroad.




HARD WORK


சாதனைப் பெண்கள்:கடுமையான உழைப்பே வெற்றிக்கு சிறந்த வழி! - சாய்னா நெவால்


பேட்மிண்டன் போட்டியில் மிக இளம் வயதில் அதிக தங்கம் வென்று, தங்க மங்கையானவர் சாய்னா நெவால். 21 வயதான இவர் கேல் ரத்னா விருதும், காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றவர்.
Saina Nehwal speaks about her Success in Badminton - Women Secrets of Success
பேட்மிண்டன் தரவரிசையில் தொடர்ந்து முன்னணி வீராங்கனையாக நிலைத்து வரும் சாய்னா, 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல நிறைய வாய்ப்பு இருப்பதாக விளையாட்டுத் துறை நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
அவரது வாழ்க்கைப் பயணம் இங்கே...
1990-ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதி அரியானா மாநிலத்தில் உள்ள கிசார் என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் பெயர் ஹர்விர் சிங் - உஷா நெவால். இவரது தந்தை விஞ்ஞானி. எண்ணைவித்து ஆராய்ச்சி மையத்தில் இயக்குநராக இருக்கிறார். சாய்னாவின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக அவர்கள் ஐதராபாத்தில் குடியேறினார்கள்.
8 வயதிலேயே சாய்னா பேட்மிண்டன் விளையாட தொடங்கிவிட்டார். அப்போது அவரை அவரது தந்தை நானி பிரசாத் என்ற பயிற்சியாளரிடம் அழைத்து சென்றார். சாய்னாவின் ஆர்வத்தையும் திறமையையும் கண்ட பயிற்சியாளர் உடனே பயிற்சி கொடுக்க சம்மதித்துவிட்டார்.
2002-ம் ஆண்டு முதல் தன் திறமையால் வேகமாக வெற்றிகளை குவிக்கத் தொடங்கினார். வெற்றிகளை குவித்துக் கொண்டே வந்ததால் அவருக்கு பண உதவி செய்ய பல நிறுவனங்கள் போட்டிபோட்டன. தற்போது அவர் 'ஒலிம்பிக் கோல் கெஸ்ட்' என்ற அமைப்பின் ஆதரவில் விளையாடி வருகிறார்.
2009 ஜூன் 21-ந்தேதி சாய்னா ஒரு சாதனை படைத்தார். முன்னணி தரவரிசை வீரரான சீனாவைச் சேர்ந்த வாங் லின் என்பவரை மலைக்க வைக்கும் புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால் இந்தோனேசியா ஓபன் சீரிஸ் பட்டத்தை வென்றார்.
இதே ஆண்டு அவரை அம்மை நோய் பாதித்தது. இருந்தாலும் சகித்துக்கொண்டு ஆவேசமாக ஆடிய அவர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடந்த உலக சாம்பியன் பட்டத்தையும் வென்றார். அப்போது "என் பெயரையும், சானியா மிர்சா பெயரையும் மக்கள் குழப்பிக் கொள்கிறார்கள். இந்த வெற்றி மூலம் அந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். இது எனது செயல்திறனை வெளிக்காட்டி உள்ளது. எனது பெயரையும், எனது முகத்தையும் பலருக்கும் அறியச் செய்துள்ளது. இனி பெயர் குழப்பம் வராது" என்றார்.
2010 ஜூன் மாதம் நடந்த சிங்கப்பூர் ஓபன் தொடரில் மீண்டும் சூப்பர் சீரிஸ் பட்டம் வென்றார். அதே ஆண்டில் தொடர்ந்து இந்தோனேசியன் ஓபன் தொடரையும் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்த தொடர் வெற்றி அவரை தரவரிசையில் 3-வது இடத்துக்கு உயர்த்தியது. அதே ஆண்டு இறுதியிலே ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பட்டத்தையும் வென்றார். அப்போது "கடுமையான உழைப்பே வெற்றிக்கு சிறந்த வழி என்பதை நான் சிறு வயதிலே உணர்ந்துவிட்டேன். அப்போதெல்லாம் நான் பயிற்சிக்காக தினமும் 25 கி.மீ. பயணம் செய்தேன்" என்றார்.
இந்த ஆண்டு தசைநார் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பிறகு களமிறங்கிய அவர் சுவிஸ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இப்படியே அவருடைய வெற்றிப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

YOUNG ACHIVER


சாதனைப் பெண்கள்:10 வயதில் சிஸ்கோ தேர்வு எழுதி சாதனை படைத்த விசாலினி

KALVISALAI-MONDAY, DECEMBER 26, 2011
10 years old Vishalini succeeds CCNA exams online - Women Secrets of Success
இன்ஜினீயரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10). பிறந்த போது வாய்பேச முடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார்.
கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்ட சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், 'பென்னட் காமத்' என்ற அறிவியல் முறைப்படி சோதித்து பார்த்ததில் அவரது ஐகியூ., எனப்படும் அறிவுத்திறன் அளவு 225 ஆக இருப்பது தெரியவந்தது. வழக்கமாக மனிதர்களின் அறிவுத்திறன் 110க்குள்தான் இருக்கும். 110க்கு மேல் இருந்தால் அறிவுத்திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் இச்சிறுமியின் திறன் 225 ஆக உள்ளது என்றார். எனவே முதல் வகுப்பு, 4ம் வகுப்புகளில் டபுள் புரமோசன் எனப்படும் இரட்டை தேர்ச்சி பெற்றார். வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பு பயில வேண்டிய சிறுமி விசாலினி 8ம் வகுப்பு பயில உள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் நெல்லையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் படித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.சி.பி., தேர்வினை ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்றார்.
தொடர்ந்து இம்மாதத்தில் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனத்தினர் நடத்தும் சிசிஎன்ஏ எனப்படும் நெட்வொர்க் தேர்வினையும் திருவனந்தபுரத்தில் ஆன்லைனில் எழுதி தேர்வு பெற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.
இவருக்கு சிறுவயதில் சிகிச்சையளித்த டாக்டர் ராஜேஷ், மதுரை டாக்டர் நம்மாழ்வார், நெல்லை கம்ப்யூட்டர் மைய நிர்வாக சுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டினர். பாகிஸ்தானை சேர்ந்த 12 வயது சிறுவன் ஹைதர் இத்தகைய சாதனையை கடந்த ஆண்டு செய்துள்ளான். ஆனால் பத்து வயதிலேயே சிறுமி விசாலினி சிஸ்கோ தேர்வினை எழுதியுள்ளார். அவரது முயற்சிகள் குறித்து சிறுமி விசாலினியின் தாய் கூறுகையில், எதை படித்தாலும், கேட்டாலும் எளிதில் புரிந்துகொள்ளும் ஞாபகசக்தி உள்ளது.
ஒரு முறை விடுமுறையில் பிளஸ் 2 வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்டு தேர்வினை எழுதினாள். இரட்டை தேர்ச்சி பெறுவதால் இவளை விட பெரிய மாணவர்களுடன் வகுப்பில் படிக்க வேண்டியுள்ளது. மேலும் இதற்காக இவளை சில பள்ளிகள் அனுமதிக்கவே மறுத்தன. ஒரு கல்வி ஆண்டில் 3 பள்ளிகளில் சேர்த்து பின்னர் வெளியேற்றப்பட்டு அலைந்தோம். எனவே இவள் வயது மீறினாலும் உயர்கல்வி பயில முறைப்படி அனுமதியளிக்க அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
டாக்டருக்கு படிப்பதுதான் தமது நோக்கம் என்கிறார் சிறுமி விசாலினி. ஏற்கனவே சிறுவயதிலேயே இத்தகைய திறமை படைத்த நெல்லையை சேர்ந்த மாணவன் சந்திரசேகர் போன்றவர்களுக்கும் வயது தொடர்பாக இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எனவே சிறுமி விசாலினிக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும் என்பதே அவரது பெற்றோரின் விருப்பமாகும்.

சாதனைப் பெண்கள்:இந்தியாவின் பார்வையை தமிழகம் பக்கம் திருப்பிய திவ்யதர்ஷினி!

kalvisalai-26-12-2011, 2011
Success Secrets of IAS first ranker Divyadharshini - Women Secrets of Success
ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்தியாவிலேயே முதல் 'ரேங்க்' பெற்று, தேசத்தின் ஒட்டுமொத்தப் பார்வையை தமிழகம் பக்கம் திருப்பியவர் திவ்யதர்ஷினி. 'சிவில் சர்வீஸ்' மாணவர்கள், பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என ஒவ்வொருவர் உச்சரிப்பிலும் பேசப்பட்டவர்.
வெற்றிப் பூரிப்பில் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இயல்பாகவும், எளிமையாகவும் வலம் வரும் அவர், இந்த அவையடக்கத்திலும் பலருக்கு முன்மாதிரியாகவே தெரிகிறார்.
திவ்யதர்ஷினியின் பெற்றோர் சண்முகம் - பத்மாவதி. தந்தை தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர். தாய் இல்லத்தரசி. இவருக்கு பிரியதர்ஷினி என்ற அக்காவும், கோபிநாத் என்ற தம்பியும் உள்ளனர். வீடு சென்னை நுங்கம்பாக்கத்தில். படித்தது எழும்பூரில் உள்ள ஆசான் மெமோரியல் பள்ளியில். படிப்பில் முதல் 10 ரேங்கிற்குள் வரும் மாணவியாக இருந்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்ததும் சட்டம் பயிலுவதற்காக சென்னை சட்ட பல்கலைக் கழக கல்லூரியில் சேர்ந்தார். இறுதியாண்டு படித்தபோதுதான் அவருக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. முதல் முயற்சியில் கிடைத்தது நல்லதொரு அனுபவம் மட்டுமே. அதுவே அடுத்தகட்ட முயற்சிக்கு துணையாக அமைய, இரண்டாம் முறை தேர்வெழுதி முதல் ரேங்க் என்ற உச்சத்தை தொட்டிருக்கிறார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான பயிற்சிமுகாமிற்கு முசவுரிக்கு கிளம்ப தயாராக இருந்த திவ்யதர்ஷினி நம்முடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். வெற்றிப் பயணம் குறித்து அவரோடு பேசியதிலிருந்து...
நீங்கள் தேர்வு செய்து படித்த பாடம்...
பப்ளிக் அட்மினிஸ்ட்ரேசன் மற்றும் சட்டம்
உங்கள் முயற்சியும் பலனும்...
சட்டப்படிப்பில் இறுதியாண்டு (2009) படித்துக் கொண்டிருந்தபோதுதான் எனக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அப்போதே படிக்கத் தொடங்கிவிட்டேன். ஆனால் கல்லூரியில் இறுதித் தேர்வு வந்த சமயத்தில், சிவில் சர்வீஸ் தேர்வும் வந்ததால் அதில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. கல்லூரிப் படிப்பிலேயே கவனம் செலுத்துவதென்று முடிவு செய்து அதை முதலில் முடித்தேன். 2010-ம் ஆண்டு முழு முயற்சியுடன் மீண்டும் சிவில் சர்வீஸ் தேர்வை எதிர் கொண்டேன். ஜெயித்து விட்டேன்.
நேர்முகத் தேர்வு அனுபவங்களை சொல்லுங்கள்...
நேர்முகத் தேர்வில் 'பெர்சனாலிட்டி' சம்பந்தப்பட்ட கேள்விகளே கேட்டார்கள். நாட்டு நடப்புகள், சூழலுக்கு ஏற்ப எப்படி செயல்படுவீர்கள்? என்பது போன்ற கேள்விகளே அதிகம்.
கேட்டகேள்விகள் எல்லாவற்றுக்கும் தயக்கமின்றி பதிலளித்தேன். வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் முதல் ரேங்க் வாங்குவேன் என்பது நானே எதிர்பார்த்திராத ஆனந்தம்..
முதல் ரேங்க் அறிவிக்கப்பட்ட அந்த நிமிடத்தில்...
எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் பெற்றோர் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். தோழிகளும் ரொம்ப மகிழ்ச்சி அடைந்தார்கள். உடனே 'கேக்' வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தார்கள். கேக் வெட்டி ஊட்டி விட்டார்கள். முன்பின் தெரியாதவர்கள்கூட வாழ்த்துச் சொன்னார்கள். இப்போதுகூட வெளியே செல்லும்போது 'நீங்க முதல் ரேங்க் வாங்கின பொண்ணுதானே' என்று பலரும் வாழ்த்துச் சொல்கிறார்கள். பெற்றவர்களை சந்தோஷப்படுத்தியதில் எனக்கும் மகிழ்ச்சிதான்.
ஊக்கம் கிடைத்தது எப்படி?
நான் திடீரென்றுதான் சிவில் சர்வீஸ் படிக்கப்போவதாக அப்பாவிடம் கூறினேன். உன் விருப்பம் போல் படி என்று கூறிவிட்டார்கள். நல்ல ஆதரவு தந்தார்கள். சுதந்திரமாக விட்டார்கள். என்னை அர்ப்பணித்துப் படித்தேன். பலன் கிடைத்தது.
சிவில் சர்வீஸ் படிக்கும் மாணவர்கள் சினிமா பார்ப்பது போன்ற பொழுதுபோக்கு விஷயங்களை தவிர்க்க வேண்டுமா?
யு.பி.எஸ்.சி. தேர்வுக்குப் படிப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு படிப்பதுபோல் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நிஜம்தான். ஐ.ஏ.எஸ். பரீட்சை ஈஸி அல்ல. ஆனால் மாணவர்கள் நினைப்பதுபோல ரொம்ப கஷ்டமானதும் அல்ல. நாம் சரியாக முயற்சி செய்தால் எளிதாக வெற்றி பெறலாம். இதை எப்படிச் சொல்வதென்றால் கஷ்டப்பட்டுப் படிக்காமல் இஷ்டப்பட்டு படித்தால் ஈஸியாக ஜெயிக்க முடியும்.
என்னைப் பொறுத்தவரை எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பதை விட எவ்வளவு ஆழமாக புரிந்து படிக்கிறோம் என்பதே வெற்றிக்கு வித்திடுகிறது. கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, விடா முயற்சி மூன்றும் இருந்தால் எல்லோரும் வெற்றி பெறலாம்.
ஐ.ஏ.எஸ். மாணவர்கள் எங்கு தடுமாறுவதாக நினைக்கிறீர்கள்?
பிரிமிலினரி என்ற ஆரம்பநிலைத் தேர்வில்தான் நிறைய மாணவர்கள் தடுமாறுகிறார்கள். ஏனெனில் இது போட்டித் தேர்வாகும். தேர்வு செய்ய  வேண்டியவர்களைவிட பல மடங்கு பேர் போட்டியிடுவதால், தகுதியானவர்களை தேர்வு செய்யும் வடிகட்டும் விதமாக கடினமான கேள்விகளே கேட்கப்படுகிறது. எனவே பிரிலிமினரி தேர்வுக்காக மாணவர்கள் கூடுதல் முயற்சி எடுத்து படித்தால் நிறைய பேர் ஜெயிப்பார்கள்.
யு.பி.எஸ்.சி. தேர்வுக்குப் படிப்பவர்கள் தினசரி செய்ய வேண்டியது என்ன?
தினசரி பேப்பரை கண்டிப்பாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். தினமும் குறைந்தபட்சம் 2 முதல் 3 மணி நேரத்தை படிப்பதற்கு செலவிட வேண்டும். இப்படி தொடர் உழைப்பையும், விடா முயற்சியையும் தினமும் கடைபிடித்தால் வெல்வது உறுதி.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை டாக்டர், என்ஜினீயர், ஐ.ஏ.எஸ். என்று ஏதாவது ஒரு சில இலக்கை நோக்கி மட்டும் விரட்டுகிறார்களே?
மதிப்பு மிக்கதும், வருவாய் தருவதுமான தொழில்களையே மக்கள் விரும்புகிறார்கள். நிச்சயமாக எந்த தொழிலும் தாழ்ந்ததல்ல. "எந்தப் பதவிக்கும் ஒரு தனிப்பட்ட மதிப்போ, அதிகாரமோ கிடையாது. அது அந்த இடத்தில் அமருபவரின் தகுதிக்கு ஏற்பத்தான் அந்தப் பதவி மதிப்பும், அதிகாரமும் பெறுகிறது" என்று அப்துல்கலாம் சொல்வார். அதுபோல உங்கள் செயல்தான் நீங்கள் செய்யும் பணிக்கு பெருமை சேர்த்துத் தரும்."
படிப்பு தவிர்த்து உங்கள் ஆர்வம் எதிலெல்லாம் இருக்கிறது?
பள்ளி கல்லூரி காலங்களில் பல விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். வாலிபால், எறிபந்து, தட்டு எறிதல் போன்ற போட்டிகளில் சில சான்றிதழ்களும் வாங்கியிருக்கிறேன். புத்தகங்கள் படிப்பது, பாட்டுக் கேட்பது, கிரிக்கெட் பார்ப்பது போன்றவை என் பொழுதுபோக்குகள்.
ரோல்மாடல் யார்?
அப்துல்கலாம் அவர்களை எனது ரோல்மாடலாக நினைக்கிறேன். அவரது பேச்சு, எழுத்து, செயல், புத்தகம் அனைத்துமே இளைஞர்களுக்கு, தன்னம்பிக்கையை தூண்டுவதாக உள்ளது.
நமது சமூகத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் பற்றி?
மக்களிடம் எந்த விஷயத்தைப் பற்றியும் விழிப்புணர்வு இல்லை. ஒவ்வொருவருக்குள்ளும் விழிப்புணர்வு வரும்போது நாடு முன்னேற்றம் அடைந்து விடும். நான் நகர்ப்புறத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும்போது அங்குள்ள மக்கள் போதிய வசதிகள் இல்லாமல் இருப்பதை நன்கு உணர்கிறேன். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிற அளவுக்கு மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன்.
நீங்கள் விரும்பும் மாற்றத்தை கொண்டு வர உங்கள் முயற்சி எப்படியிருக்கும்?
ஐ.ஏ.எஸ். ஆக தேர்வானவர்களை ஒவ்வொரு துறைக்கும் தலைமைப் பொறுப்புகளில் நியமித்தாலும் மாவட்ட கலெக்டராக நியமனம் பெறுபவர்களிடம் மட்டுமே அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை கொண்டு வரும் அதிகாரம் இருக்கிறது. எனவே மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று பணி செய்தால் தேவையான மாற்றங்களை கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன். எந்த துறையில் இருந்தாலும் என்னால் முடிந்த சமூக சேவைகளை செய்வேன்.

sleep


டிப்ஸ்:அலுவலகத்தில் கோழி தூக்கம் போடுவது நல்லதா?

kalvisalai - Saturday, December 26, 2011
Is a nap in office Good? - Tips for Women
அலுவலகத்தில் சிலர் மதியம் ஒரு பத்து பதினைந்து நிமிடங்களுக்கு ஒரு கோழி தூக்கம் போட்டால் போதும், பூஸ்ட் குடித்தது போன்று புத்துணர்ச்சியாகி விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் மதிய நேரம் 15 முதல் 30 நிமிடங்கள் வரையிலான இதுபோன்ற தூக்கம் நல்லது; இருமடங்கு சுறுசுறுப்புடன் வேலைகளை செய்ய முடியும் என்று மருத்துவர்கள்கூட அதனை வலியுறுத்துகிறார்கள்.
எனவே இத்தகைய கோழி தூக்கம் போடுபவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் இன்றைய அவசர யுக வாழ்க்கையில் பலருக்கு அலுவலகத்தில் மதிய உணவு உண்டதுமே தூக்கம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த உடலே காற்று போன டியூப் கணக்காக புஸ்...ஸென்று சக்தி இழந்து சோர்வடைந்து போய்விடும். அப்படியே மேஜை மீதே தலை சாய்த்துவிடுவார்கள்.
இத்தகைய உடல் சோர்வு மற்றும் சக்தி குறைவு மதிய நேரம் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து நிபுணர்கள் தெரிவிக்கும் காரணங்கள் இங்கே:
இரவில் ஆழ்ந்த தூக்கமின்மை:
நம்மில் பலர் அலுவலகத்தையும், அலுவலக வேலையையும், வீட்டிற்கு எடுத்து வருவார்கள். அல்லது இரவில் வெகு நேரம் நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ தொலைபேசியில் பேசியபடியோ அல்லது கணினியில் வேலை செய்துகொண்டோ அல்லது நள்ளிரவு வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டோ இருப்பார்கள். இவ்வாறு செய்வது நமது தூக்கத்தின் பிரதான நேரத்தை விழுங்கிவிடும்.
அதாவது முன்னிரவு தூக்கம்தான் சோர்ந்துபோயிருக்கும் நமது நரம்புகளை புத்துணர்வு பெறவும், உடல் மீண்டும் சக்தி பெறவும் உதவுகிறது. ஆனால் தொடர்ந்து இரவில் தாமதமாக தூங்கி, அதிகாலை எழுந்து வேலைக்கு ஓடுவதால், உங்களது உடலில் உள்ள சக்தியெல்லாம் மதியத்திற்குள் உறிஞ்சப்பட்டுவிடுகிறது. அதனால்தான் மதியம் உடல் சோர்வு ஏற்படுகிறது. எனவே ஒருவருக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியமானது. இவ்வாறு தூங்கும்போது மொபைல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிடுவது இன்னும் சாலச்சிறந்தது.
விளையாட நேரமில்லாமை அல்லது உடற்பயிற்சியின்மை:
ஒருவர் தொடர்ந்து உடற்பயிற்சியோ அல்லது விளையாட்டு எதுவும் இல்லாமலோ இருந்தால் அவரது உடலில் சக்தி அவ்வளவு சீக்கிரத்தில் எரியூட்டப்படாது. காலை வேளைகளில் அலுவலகம் செல்லும் பரபரப்பில், விளையாட்டு அல்லது உடற்பயிற்சிக்கென்று தனியாக நேரம் ஒதுக்கி செலவிடமுடியாது என்பது உண்மைதான் என்றாலும், மாலை நேரத்திலாவது ஒரு முப்பது நிமிடங்களாவது நடைபயிற்சி அல்லது ஜாக்கிங் போன்றவற்றை செய்வது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.