Translate

ஞாயிறு, ஜூன் 10, 2012

Habits raise cervical cancer risk.

           New Delhi: Every fourth death due to cervical cancer occurs in India, and by 2025 the death rate could increase by 70%, data published by Internal Agency for Research on Cancer shows. The reasons for this surge in cervical cancer cases range from unprotected sex with multiple partners to early sexual activity and poor genital hygiene. Doctors say a few precautions can help women avoid the disease.

          "Cervical cancer is mainly caused by the human papilloma virus (HPV); it's sexually transmitted. Women who have had more than one sexual partner in their lifetime or have intercourse with a man who has had more than one partner, are likely to be infected," said Dr GK Rath, who heads the BRA Institute Rotary Cancer Hospital at AIIMS. "Practising good genital hygiene can lower the risk by more than 50%," he added.

           According to Dr Aasha Sharma, head of the gynaecology department at Rockland Hospital, girls who have sex at a young age are also at higher risk. "Early exposure to HPV increases the risk of cervical cancer as it increases the overall time frame that the virus has to influence the development of abnormal cancerous cells," she said. Sharma stressed the need for HPV vaccination.

        Dr Suversha Khanna, executive director of Dharmshila Cancer Hospital and Research Centre, said early diagnosis has made fighting cervical cancer easier in developed nations. "Regular gynaecological checkups and specific tests like pap smear after a woman becomes sexually active can help in early diagnosis."

         Early stages of the cancer bring on symptoms like abnormal vaginal bleeding or spotting between periods, pain during intercourse or bleeding afterwards, pelvic pain and weight loss. Treatment depends on the stage of the cancer. "In the early stages, it can be treated by a cone biopsy, which involves removing a part of the cervix. However, in advanced cases, a major surgery involving removal of the uterus is necessary. This may be combined with radiation and chemotherapy," said an expert.

     He added that in some cases the entire treatment revolves around radiation therapy, with or without chemotherapy.

H1N1 returns

Man held for cheating people on holding H1N1 vaccination camp

A 26-year-old man was held in Hadapsar on Wednesday for cheating people on the pretext of holding an H1N1 influenza vaccination camp.

H1N1 plea only seeks to serve private interests: Madras high court

The Madras high court has thrown out a petition seeking a direction to the authorities concerned that H1N1 henceforth not be referred to as ‘swine flu’.

Not vaccinated for H1N1, health workers at risk

On Wednesday, four of the six cases reported in Chennai were doctors, medicos and paramedical staff. Many doctors, nurses and paramedical staff in cities like Pune, Mumbai, Bangalore and Jaipur said they were yet to take the first dose of the anti-flu vaccine.

H1N1 claims woman; third death in 1 month

A 35-year-old woman from Tiruporur in Kancheepuram district died of A H1N1 at the Government General Hospital, Chennai, on Monday. This is the third such death in the last one month in the state.

7 new cases of H1N1 in Tamil Nadu, 4 from Chennai

Four more people tested positive for the H1N1 virus in the city on Sunday, along with three others in the districts, taking the number of people affected in Tamil Nadu to 64 this year.  Courtesy-The Times Of India 

            

ஆரோக்கியமான குழந்தைகளே படிப்பில் சாதிக்கின்றனர்!

         பள்ளி குழந்தைகளின் கல்வித்திறனை வளர்ப்பதில், அவர்கள் படிக்கும் நேரத்தைவிட, அன்றாட சுகாதார செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு முக்கிய பங்கு வகிக்கின்றன என, ஆய்வு ஒன்றில் தெரிய வந்ததுள்ளது.
         இந்திய மருத்துவக் கழகம், சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா ஆகிய பெருநகரில், "பள்ளி குழந்தைகளின் கல்வித்திறனில், அவர்களின் அன்றாட சுகாதார செயல்பாடுகளின் பங்கு" எனும் தலைப்பில், ஆய்வு ஒன்றை அண்மையில் நடத்தியது.
        500 பேரிடம் சோதனை: ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின், 500 பெற்றோரிடம், 40 குழந்தை நல மருத்துவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில் வெளிவந்துள்ள சுவாரஸ்ய தகவல்கள்:
         * தேர்வுகளில், 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் மற்றும் பள்ளி வருகைப்பதிவு கொண்ட மாணவர்கள் ஒரு குழுவாகவும் (குழு 1); 80 சதவீதத்திற்கு குறைவானவர் மற்றொரு குழுவாகவும்(குழு 2) பிரித்து ஆய்வு செய்ததில், பள்ளி வருகைப்பதிவுக்கும், மதிப்பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
        * தினமும் குளித்தல், உணவு அருந்தும் முன் கை கழுவும் பழக்கம், உறங்கும் கால அளவு, வெளிப்புற விளையாட்டு ஆகிய காரணிகள், இவ்விரு குழுக்களைச் சேர்ந்த குழந்தைகளின் உடல் சுகாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது, மாணவர்களின் வருகைப் பதிவேட்டில் எதிரொலிப்பதும் தெரிய வந்துள்ளது.
தொற்று நோய் பாதிப்பு:
       * அதாவது, தினமும் குளிப்பது, அவ்வபோது கை கழுவுவது போன்ற அடிப்படை சுகாதாரத்தை, குழு 1ல், 68 சதவீதம் பேர் மற்றும் குழு 2ல், 19 சதவீதம் பேர் பின்பற்றுவது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, இரண்டாவது குழுவைச் சேர்ந்த மாணவர்கள், உடல்நல பாதிப்பால், குறிப்பாக குடல் சார்ந்த தொற்றால் பாதிக்கப்பட்டு, பள்ளிக்கு அதிகம் விடுப்பு எடுத்துள்ளனர்.
     * குழு 2ல், 43 சதவீதம் பேர் மட்டும், ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் படிப்பது, 39 சதவீதம் பேர், ஒரு நாளைக்கு 7 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குவதும் கண்டுபிடிக்கப்பட்டது. மாறாக, குழு 1ல், 63 சதவீதம் பேர், ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் படிப்பது, 15 சதவீதம் பேர் மட்டும், ஒரு நாளைக்கு 7 மணி நேரத்திற்கு குறைவாக உறங்குகின்றனர். இவ்வாறு, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
   விழிப்புணர்வு தேவை: இந்திய மருத்துவ கழக பொதுச் செயலர் ஜதீன்தர் குமார் கூறும்போது, "ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க, அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை சுகாதார பழக்க வழக்கங்கள் குறித்து, பள்ளி குழந்தைகளுக்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Himalayan glaciers dwindle each year

         SHIMLA: Global warming is diminishing the Chhota Shigri glacier in the Pir Panjal ranges of Himachal at 0.67 metres a year, report French and Indian researchers.

        The study, jointly supported by the department of science and technology, India's space agency ISRO and the Indo-French Centre for Promotion of Advanced Research, concluded that the glacier mass was thinning more rapidly this century.

         The researchers, including those from New Delhi's Jawaharlal Nehru University and glaciologists from France, said that the glacier was losing ice due to rising atmospheric temperatures.

       The decrease is measured in terms of the ice flux, or the volume of ice passing a point per year.

       "Our data suggests that the ice fluxes have diminished by 24 per cent to 37 per cent below 4,750 metres above sea level between 2003 and 2010," said Pottakkal George Jose from the JNU School of Environmental Studies and a member of the research team.

      Team leader A L Ramanathan said the thinning of Chhota Sigri glacier, located about 100 km from the hill resort of Manali, had picked up speed this centu

ITI students scholarship

           தொழிற் கல்வி அளிக்கும் அரசு கல்வி நிறுவனமான ஐடிஐயில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஸ்ரீ வித்யாசாகர் கல்வி அறக்கட்டளை கல்வி உதவித் தொகை அளிக்கிறது. அதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
          தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஐடிஐயில் படித்து வரும், சேர்ந்துள்ள மாணவர்கள் இந்த கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
Scholarship :  ஐடிஐ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
Course : 
Provider Address : 
Description :     பி-1, நறுமுகை அடுக்ககம், பிருந்தாவன் நகர் விரிவு, ஆதம்பாக்கம், சென்னை - 88 என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். 

scholarship for science studying students

            அறிவியல் மற்றும் மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு கிஷோர் வைக்யானிக் புரோட்சஹன் யோஜ்னா என்ற கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
            அறிவியல் பாடத்தை எடுத்துப் படிக்கும் பிளஸ்1, 2 மாணவர்களுக்கும், பி.எஸ்சி, பி.எஸ்., எம்.எஸ்சி., படிக்கும் பட்டதாரிகளுக்கும், பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற தொழில் படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கும், மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும் இந்த கல்வித் தொகை வழங்கப்படுகிறது.
            இது குறித்த விவரங்களை அறிய http://www.kvpy.org.in இணையதளத்தைப் பார்க்கவும்.

நேரத்தை நிர்வகித்து செயல்படுங்கள்

       காலம் கண் போன்றது. கடமை பொன் போன்றது என்பது பழமொழி. அதற்கேற்ப நாம் காலத்தின் அருமையை உணர்ந்து செய்யும் வேலையை சிறப்பாகவும், விரைவாகவும், சரியான நேரத்திலும் செய்ய வேண்டும்.
     இன்றைய இயந்திர உலகில் நேரம் என்பது மிக முக்கியமானது. நேரத்தை தவற விடுவது, வாழ்க்கையை தொலைத்து விடுவதற்குச் சமம். நீங்கள் நேரத்தை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும்? எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்? என்பதற்கான டிப்ஸ் பற்றி கீழே காணலாம்.
    * ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான் என்ற கால அளவு மாறப் போவதில்லை. அதனால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
    *உங்களுடைய பயனுள்ள நேரம் எங்கு வீணாக செலவிடப்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும். எடுத்துக்காட்டாக சிலர் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசுவார்கள் அல்லது இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பார்கள் அல்லது டிவி பார்ப்பதில் நேரத்தை செலவிடுவார்கள். இவற்றில் எவ்வகையில் உங்களுடைய நேரம் வீணாகசெலவிடப்படுகிறது என்பதை அறிந்து தவிர்த்து விடுங்கள்.
   *நீங்கள் சரியான கால அளவை பின்பற்றுவதை, இலக்காக வைத்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களது நடத்தையில் மாற்றம் ஏற்படும். உதாரணமாக, நான் காலை 10 மணிக்கு இந்த வேலையைத் தான் செய்ய வேண்டும் என உங்களது நேரத்தை வகுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக, நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று திட்டம் மட்டும் போடாமல், அதை செயல்படுத்த முனையுங்கள்.
   *தினமும் எழும் நேரம் மற்றும் உறங்கும் நேரம் உள்ளிடவற்றை சரியான முறையில் வகைப்படுத்தி கொள்ளுங்கள்.
    *மற்றர்வர்கள் கிண்டல் செய்வார்களோ என அஞ்சி, உங்களது கால அளவை மாற்றிக் கொள்ளாதீர்கள். உங்களது வேலையை சரியான நேரத்தில் வழக்கம் போலவே செய்யுங்கள்.
   *இறுதியாக, யாருக்காகவும் காத்திருந்து உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள்.

பல மணிநேரம் எப்படி படிப்பது?

           ஒரு மாணவர் ஒரு நாளில் 4 மணி நேரங்கள் படிக்கலாம் என்று நினைப்பார். ஆனால் அவரால் தொடர்ச்சியாக 4 மணி நேரம் அமர்ந்து படிக்க முடியுமா? பொதுவாக,பலராலும் இது இயலாத காரியம். ஒரு தட்டில் இருக்கும் சோறு முழுவதையும் நாம் உண்டு முடிக்க வேண்டும் என்ற நிலையில், அந்த சோறு முழுவதையும் நாம் அப்படியே வாயில் கொட்டிக் கொள்வதில்லை. அது முடியாத காரியமும்கூட.
           எனவே நாம் சிறிது சிறிதாக எடுத்து உண்கிறோம். முடிவில், முழு சோறும் காலியாகிறது. இதுபோலத்தான் படிப்பும். 4 மணிநேரம் படிக்க வேண்டும் என்று இருக்கையில், நாம் ஒரேடியாக அமர்ந்து தொடர்ந்து படித்தால் நாம் ஒருவழியாகி விடுவோம். மூளை மற்றும் உடல் ஆகிய இரண்டுமே சோர்ந்துவிடும். படித்த விஷயங்களும் நினைவில் பதியாமல் போகலாம். எனவே அந்த 4 மணி நேரத்தை சில அல்லது பல பகுதிகளாக பிரித்து, அதற்கேற்ப உட்கார்ந்து படிக்க வேண்டும்.
         அந்த மொத்த நேரமான 4 மணி நேரத்தை குறைந்தபட்சம் 30 நிமிடத்திலிருந்து அதிகபட்சம் 40 நிமிடங்கள் வரை பிரித்துக்கொள்ளலாம். அப்போது உங்களது மூளையும் நன்கு சுறுசுறுப்புடன் ஒத்துழைக்கும். அத்தகைய இடைவெளிகளுக்கு மத்தியில், சில எளிமையான பயிற்சிகள் செய்து, உடலையும், மனதையும் ரிலாக்சாக மாற்றலாம். உங்களின் கைகள், விரல்கள், கழுத்து மற்றும் தோள்பட்டைகள் போன்ற உறுப்புகளுக்கு சில எளிமையான பயிற்சிகளை தரலாம்.
        மேலும் சிறிதுநேரம் கண்களை மூடி அமரலாம். சில சமயங்களில் லேசான மூச்சுப் பயிற்சியும் செய்யலாம். இடைவெளி சமயங்களில் நீர் அருந்தலாம். ஏதேனும் ஜூஸ் அல்லது தேநீர் கூட அருந்தலாம். ஒரே பாடத்தை படிக்காமல், பாடங்களை மாற்றி மாற்றி படிக்கலாம். அதேசமயம், இடைவேளையின்போது, டி.வி. பார்த்தல், விளையாடுதல் போன்ற விஷயங்களில் ஈடுபடக் கூடாது.
        அத்தகைய நடவடிக்கைகள் படிப்பை பாதித்துவிடும். தேவைப்பட்டால், இடைவெளி நேரங்களில் முகத்தினை கழுவலாம். இதுபோன்ற செயல்முறையில் நீங்கள் ஈடுபடும்போது, உங்களின் மனமும், உடலும் சுறுசுறுப்பாகி 4 மணிநேரம் என்பது, 5 அல்லது 6 மணிநேரமாகவும் அதிகரிக்கலாம்.

FREE IS NOT FREE

பழநி: அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய "குரூப் -2' தேர்வில், ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தை சேர்ந்த 400 பேர் வெற்றி பெற்று உள்ளனர். ஜூலையில் நடந்த தேர்வு முடிவு, நேற்று முன்தினம் வெளியானது. இதில், 6695 பணியிடங்களுக்கு 6949 பேர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ""ஆயக்குடி இலவச பயிற்சி மையத்தை சேர்ந்த 2000 பேரில் 400 பேர் வெற்றி பெற்றுள்ளனர்,'' என, மைய இயக்குனர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை-09-06-2012

சென்னை: குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாத அரசு பள்ளிகள் பற்றிய விவரங்களை வரும் 15ம் தேதிக்குள் மாவட்ட அதிகாரிகள் அறிக்கையாக அனுப்ப வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, விழிப்புணர்வு முகாம்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த நடவடிக்கைகளை, 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை அவசியம் இருக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, இத்தகைய வசதிகள், அரசுப் பள்ளிகளில் இருக்கிறதா என்பதை, நேரில் சென்று பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும்.
இந்த வசதிகள் இல்லாத, அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இருந்தால், அதைப் பற்றிய விவரங்களை, 15ம் தேதிக்குள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக, சம்பந்தபட்ட வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கு கருத்துருக்கள் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால், சிறப்புத் திட்டத்தின் கீழ், ஒரு கழிப்பறைக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.