Translate

புதன், டிசம்பர் 28, 2011

பூமியை சூடாக்கும் பச்சைப் புரட்சி (

Second Green Revolution will root a negative consequences

)
Second Green Revolution will root a negative consequences - Tamil Katturaikal - General Articles
இரண்டு பெரும் நிகழ்வுகள் இன்றைய உலகத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன. ஒன்று பூமி வெப்பம் அதிகரிப்பது, மற்றொன்று பட்டினிச் சாவுகள். இவை இயற்கைச் சீற்றத்தால் நிகழ்பவைகளா? இதனை அலசுகிறது இக்கட்டுரை.
உலக சுகாதார அமைப்பு 2007 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில் மனிதனால் உருவாக்கப்பட்டு வரும் காலநிலை மாற்றம் 2020ஆம் ஆண்டு முதல் உலகெங்கும் ஆண்டுதோறும் 3 இலட்சம் பேர் பலியாக காரணமாக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளது. இந்த கணிப்புக்கு முன்கூட்டியே 2000 மாவது ஆண்டு முதல் காலநிலை மாற்றத்தால் உலகெங்கும் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.
வளர்ச்சி அடைந்தவை என்று சொல்லப்படுகிற பணக்கார நாடுகள் இந்த கேடுகளுக்கு காரணமாக இருக்கின்றன. ஆனால், ஏழை நாட்டு மக்கள் இதன் பாதிப்புகளை சந்திக்கின்றனர். குறிப்பாக தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த மக்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக மலைவாழ் மக்கள், நதிக்கரை ஓரம் வாழும் மக்கள், கடலோர மக்கள் மற்றும் நிலமற்ற உழைக்கும் மக்கள் என விளிம்புநிலை மக்கள்தான் அதிக அளவில் உயிர் இழந்திருக்கின்றனர்.
பூமியைச் சுற்றி உருவாகும் சரிப்பசை வளையம் உருவாகுவதனால் ஒளி உள்ளே வருகிறது. பூமிக்கு வந்த ஒளி வானத்திற்குத் திரும்புவது தடைபடுகிறது. இதனைப் "பசுமை இல்ல விளைவு" என்று அழைக்கின்றார்கள். இதற்கு அடிப்படையாக சூழும் காற்றுக்களை பசுமை இல்லக் காற்றுக்கள் என்கிறார்கள். இத்தகைய காற்றுக்களில் கரி அமிலகாற்றே (கார்பன் டை ஆக்சைடு) முதல் இடத்தைப் பிடிக்கிறது. காற்றும் பங்களிப்பும் கீழே தரப்படுகிறது.
கரி அமிலக் காற்று  49%
மீதேன்    18%
குளோரோ ஃபுளோரோ கார்பன் 14%
நைட்ரசன் காற்று   6%
மற்றவை    13%
கடந்த நூறு ஆண்டுகளில் வான்வெளி வெப்பம் 35% உயர்ந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் சராசரி வெப்பம் 0.740 டிகிரி சென்சியஸ் உயர்ந்துள்ளது. 2100 ஆம் ஆண்டு இரண்டு முதல் மூன்று டிகிரி உயரக்கூடும் என்று கணிக்கிறார்கள். பனி உருகுவதால் நதிகள் கடலுக்கு நீர்க் கொடுப்பது குறையும். கடல்நீர் நிலத்திற்கு உள்ளே புகுவதால் குடிப்பதற்கான நீரின் அளவு குறையும். வெள்ளமும், வறட்சியும் மாறி மாறி வரும். பயிர் வளர்ச்சி நேரம் குறையும். விளைச்சலும் குறையும் என்றெல்லாம் கூறுகிறார்கள். கடலோரங்களில் புயலும், வெள்ளமும் பெருகுவதால் கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர்வார்கள். உயிரிழப்பும், பொருளிழப்பும் பெரிய அளவில் நிகழும்.
அ. குடிநீர்ப் பற்றாக்குறை:
வடக்கு ஆசிய நாடுகளில் குடிநீர் பற்றாக்குறை மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும், தட்ப வெப்ப மாற்றத்தைத் துல்லியமாக ஆய்ந்தறியும் அரசுகளுக்கு இடையிலான குழு (IPCC) கீழ்க்கண்ட புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
வடக்கு ஆசியாவில் 50 கோடி மக்கள், சீனாவில் 25 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். பனிப்பாளம் உருகி ஆற்றோட்டம் குறைவதால் இந்திய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். 2020ஆம் ஆண்டில் ஆசியாவில் 12 கோடி மக்கள் முதலாக 120 கோடி மக்கள் வரை சிக்கல்களுக்கு ஆளாவார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் 7 கோடி 50 லட்சம் மக்கள் வரை பாதிப்புக்கு ஆளாவார்கள். தென் அமெரிக்க நாடுகளில் 1 கோடி 20 லட்சம் முதல் 8 கோடி 10 லட்சம் வரையான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஆ. பயிர் விளைச்சல் சரியும்:
பயிர்களின் வளர்ச்சிப் பருவம் சுருங்கும். அதனால் 2020 ஆம் ஆண்டு வாக்கில் ஆப்பிரிக்க நாடுகளில் 50 விழுக்காடு விளைச்சல் குறையும். மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் 2050ஆம் ஆண்டு வாக்கில் 50 சதவீதம் விளைச்சல் குறையும். உலக உற்பத்தி பாதிப்புக்கு ஆளாவதால் ஏழை நாடுகள் உணவை இறக்குமதி செய்வதிலும் பெரும் சிக்கல் ஏற்படும்.
இ. கடலோரப் பகுதி வெள்ளம்:
கடல் மட்டம் உயர்வதால் மக்கள் நெருக்கம் மிகுந்த கல்கத்தா, டாக்கா, ஷாங்காய் போன்ற பெருநகரங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும். வறட்சியினாலும் மக்கள் இடம் பெயருவார்கள். இதனால் உலகத்தில் பாதுகாப்பும் அமைதியும் பாதிக்கப்படும். இத்தகைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அரசாங்கங்களின் கவனம் முழுவதும் இப்பிரச்சனையின் மீது குவிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
காற்றில் கலந்த கரி மண்டலம் உழவுத் தொழிலைப் பாதிக்கிறதா?
ஆம். இரசாயன உரங்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் புகையைக் கக்குகின்றன. உரத்தைச் சுமந்து செல்லும் வாகனங்கள் புகையைக் கக்குகின்றன. உப்பு உரம் நைட்ரசன் காற்றைக் கக்குகிறது. பயிர்த் தொழிலில் பயன்படுத்தும் இதர பொருள் உற்பத்தி செய்யும் ஆலைகளும் புகையைக் கக்குகின்றன. நிலத்தில் பயன்படுத்தும் எந்திரங்கள் புகையைக் கக்குகின்றன. ஆக மொத்தம் பூமி சூடாவதற்கான காரணிகளில் பயிர்த்தொழிலின் பங்கு 35 விழுக்காடாகும். அதே போல, தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பயிர்த்தொழிலும் பாதிப்புக்கு ஆளாகிறது.
2008ஆம் ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அறுவடைக்குக் காத்திருந்த நெற்பயிர்கள் அடை மழையால் நீரில் மூழ்கிப் போயின.
2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் காலம் தவறிப் பெய்த அடைமழையால் திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உளுந்து, பயறு வகைப் பயிர்கள் அழிந்துபட்டன.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட அழிப்பேரலையில் கடலோரப் பகுதியில் அறுவடைக்குக் காத்திருந்த நெற்பயிர் அழிந்துபட்டது.
ஆழிப்பேரலை தொடங்கி நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் சாகுபடிக்கு ஒவ்வாததாக மாறியுள்ளது.
2009ஆம் ஆண்டு மழைக் காலத்தில் வங்காளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நெற்பயிர்கள் அழிந்து போயின.
2010 ஆம் ஆண்டிலும் இரண்டு இலட்சம் ஏக்கர் பரப்பில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகிப்போயின.
இரசாயனத்தைப் புகுத்தியது பசிப்பணி போக்கவா?
இவ்வளவு உண்மைகள் அம்பலமான பின்பும் உழவாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் உழவாண்துறை அலுவலர்களும் இரசாயன உரம், பூச்சி கொல்லிகள், பூஞ்சானக் கொல்லிகள், களைக் கொல்லிகள் போன்றவற்றை பரிந்துரை செய்வதை நிறுத்தவில்லை. இவையாவும், இவற்றை விற்று இலாபம் பார்ப்பதற்காகவே குள்ளரகப் பயிர்களைப் புகுத்தினார்கள் என்ற வாதத்தை உறுதிப்படுத்துவனவாக உள்ளன. இந்தியாவில் பசிப் பிணியைப் போக்குவதற்காகவே பச்சைப் புரட்சி வந்ததாக ஒரு கட்டுக்கதை உலவுகிறது. உண்மையோ வேறு விதமாக உள்ளது. ஒட்டுக்கட்டி உருவாக்கிய குட்டை ரகத்தை அமோக விளைச்சல் ரகம் என்று உழவர்களுக்கு விளம்பரம் செய்தார்கள். ஆனால், விஞ்ஞானிகள் மத்தியில் அதிகம் இரசாயன உரம் ஏற்கும் ரகம் என்ற கருத்துப் பரிமாறினார்கள். அதிக ரசாயன உரம் இட்டபோது நாட்டு நெல் ரகம் சாய்ந்து போனது. அதனால் அதிக ரசாயனத்தை இந்திய உழவர் தலையில் கட்டுவதற்காகவே குள்ளரகத்தைப் புகுத்தினார்கள். அதனால்தான், ஆல்பர்ட் ஓவார்டு சொன்னதை ஏற்கவில்லை. ரிச்சார்யா சொன்னதை ஏற்கவில்லை. எக்ன நாராயன் ஆவணத்தை சீர்தூக்கவில்லை.
பச்சை புரட்சியினுடைய கொடுமைகளிலிருந்து உழவரையும் உண்போரையும் காப்பாற்றும் வகையில் இயற்கை உழவாண்மை வளர்ந்து கொண்டிருக்கும் போது அப்படி ஏதும் நடந்துவிடாதபடி அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த மான்சாண்டோ கம்பெனி இந்திய அரசாங்கத்தை நெருக்குகிறது. இந்தியாவில் ஒட்டுவிதை விற்றுக் கொண்டிருந்த மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மகிக்கோ கம்பெனியின் பங்கு தொகைகளை மேலே சொல்லப்பட்ட மான்சாண்டோ கம்பெனி விலைக்கு வாங்கிவிட்டது. அதே போல சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்து விற்றுக் கொண்டிருந்த ராசி கம்பெனியின் பங்குத் தொகைகளையும் மான்சாண்டோ கம்பெனி விலைக்கு வாங்கிவிட்டது. இந்திய கம்பெனிகளை வாங்கிவிட்டதன் அடையாளமாக மான்சாண்டோ மகிக்கோ என்றும் மான்சாண்டோ ராசி என்றும் கடைப்பெயர்களையும் மாற்றிவிட்டது. இதன் பிறகு மான்சாண்டோ மகிக்கோ கம்பெனியின் பெயரில் பி.டி. கத்திரிக்காய் விற்பதற்கு நடுவண் அரசிடம் அனுமதி கேட்டு கம்பெனி அழுத்தம் கொடுக்கிறது.
"பச்சைப் புரட்சி" என்று பெயர் சூட்டியதே ஒரு அமெரிக்கன் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் எழுதியுள்ளார். உலக வரலாற்றில் நடந்தேறியுள்ள புரட்சிகள் அனைத்தும் சிவப்பாக இருந்ததுதான் சரித்திரம் "பச்சைப் புரட்சி" என்ற பெயர் புரட்சியையே இழிவுபடுத்துவதாக அமைந்தது.
பச்சைப் புரட்சியின் விளைவுகள்:
இந்தியாவில் உழவுத்தொழில் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது என்று கூறும் தேசிய உழவர் ஆணையத்தின் தலைவர் திரு. எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையில்...
1. 1947இல் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு சொன்னார், "வேறு எதுவும் காத்திருக்கலாம், ஆனால் உழவுத் தொழில் காத்திருக்க முடியாது" என்று. ஆனால் 59 ஆண்டுகள் கடந்த பின்பும் உருப்படியான கொள்கை ஏதும் உழவுக்காக உருவாக்கப்படவில்லை.
2. 65 கோடி மக்களுக்கு உழவைத் தவிர வேறு வழி இல்லை. உழவொன்றே அவர்கள் வாழ்கைக்கு ஆதாரம்.
3. 65 கோடி மக்களுக்கு வருவாய் குறைந்தவண்ணம் உள்ளது. செலவுகளும், எதிர்பாராத இழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
4. உழவர்கள் வாங்கியுள்ள கடன் அதிகரித்த வண்ணம் உள்ளது.
5. விளைபொருட்களை விற்பதற்கான உட்கட்டமைப்பு மிகவும் சொற்பம்.
6. காய்கறி, பழம் போன்ற அழுகும் பொருட்களுக்கு சந்தையும், சேமிப்புக் கிடங்கு வசதிகளும் மிக மிக சொற்பம்.
7. உருப்படியான கொள்கை ஏதும் இல்லாமையால் கால்நடை பராமரிப்பு நொறுங்கிப் போயுள்ளது.
8. உழவை நம்பியுள்ள குடும்பங்களில் நான்கில் ஒருவருக்கு மட்டுமே வங்கிக்கடன் கிடைக்கிறது.
9. உழவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்வது மட்டுமல்ல, அதிகரித்த வண்ணம் உள்ளது.
10. முப்பதாயிரம் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
11. தற்கொலைக்கு அடிப்படைக் காரணங்கள்: அ. வாங்கிய கடனுக்கு வட்டி மிக அதிகம். ஆ. அதிகரித்து வரும் இடுபொருள் செலவு. இ. விளைபொருளுக்கான நியாயமான விலை கிடையாது.
12. கம்பு, தினை, சாமை போன்ற சத்து மிகு தானியங்கள், பருப்பு, எண்ணெய் வித்து, கிழங்கு போன்றவை அனாதைப் பயிர்கள். இவற்றுக்குச் சந்தையோ, நியாயமான விலையோ கிடையாது.
13. பள்ளி செல்லும் வயது வராத குழந்தைகளில் நான்கில் மூவருக்கு சத்துணவுப் பற்றாக்குறை, இரும்புச் சத்து குறைவு (சோகை)
14. 55% குழந்தைகளுக்கு வைட்டமின் கி பற்றாக்குறை. அதனால் பார்வைக் கோளாறு.
15. பயிர்த் தொழிலில் அரசு முதலீடு குறைந்தவண்ணம் உள்ளது.
16. கோதுமையும், நெல்லும் தீவிரமாக சாகுபடி செய்ததால் நிலம் உப்பாகிப் போனது. நிலத்தடி நீர் குறைந்தவண்ணம் உள்ளது.
17. நுண்ணூட்டங்களின் பற்றாக்குறை அதிகரித்தவண்ணம் உள்ளது.
18. ஆண்டு சராசரி மழை போதுமானதாகத் தோன்றுகிறது. ஆனால், மழையின் பெருமளவு 100 மணி நேரத்தில் கொட்டி விடுகிறது.
19. கிடைக்கும் நீர் அனைத்தும் பூச்சிக்கொல்லி நஞ்சாலும், மிகக் கொடிய நச்சுப் பொருட்களாலும் மாசுபட்டுக் கிடக்கின்றன.
20. மக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், பயிருக்குப் பாய்ச்சவும் மேலும் மேலும் குழாய்க் கிணற்றையே சார்ந்துள்ளார்கள். இந்தக் குழாய்க் கிணறுகளில் மிகக்கொடிய ஆர்சனிக் நஞ்சு வருகிறது. மேலூற்று கிணறுகள் வற்றிப்போய் விட்டன.
இப்படி உழவர் நிலைமையை வருணித்தாலும் சுவாமிநாதன் இக்குறைபாடுகளுக்கான வேர்க் காரணத்தைக் தோண்டவில்லை. குறைபாடுகளைத் தீர்ப்பதற்கும் வழிசொல்லவில்லை.
அமைச்சர்களும் புதுவழி தேடவில்லை. மாறாக ஆளுவோரும் அவர்களது ஆலோசகர்களும் மக்கள் தலையில் பேரிடியை இறக்குகிறார்கள். அதன் பெயர் "இரண்டாம் பச்சைப் புரட்சி".

செவ்வாய், டிசம்பர் 27, 2011

SIR C V RAMAN

Chandrasekhara Venkata Raman.jpgChandrasekhara Venkata Raman.jpgChandrasekhara Venkata Raman.jpgச. வெ. இராமன்


சர் சந்திரசேகர வெங்கட ராமன்

பிறப்பு 7 நவம்பர் 1888
பிறப்பிடம் திருவன்னைகோயில், திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு நவம்பர் 21 1970 (அகவை 82)
இறப்பிடம் பெங்களூரு, கர்நாடகம், இந்தியா
தேசியம் இந்தியன்
இனம் தமிழர்
துறை இயற்பியல்
பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க 
மாணவர்கள்   ஜி. என். ராமச்சந்திரன்
அறியப்படுவது இராமன் விளைவு
விருதுகள் Knight Bachelor (1929)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (1930)
பாரத ரத்னா (1954)
லெனின் அமைதிப் பரிசு (1957)
மதம் இந்து
சர் சந்திரசேகர வெங்கட ராமன் (Chandrasekhara Venkata Raman) (நவம்பர் 7, 1888 - நவம்பர் 21, 1970) பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்
சி.வி.இராமன் அவர்கள் நவம்பர் 7 ஆம் நாள், 1888ஆம் ஆண்டில் இந்தியாவில், தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிராப்பளியில் பிறந்தார்.இராமன் அவர்கள் சென்னையிலே உள்ள பிரெசிடென்சிக் கல்லூரியில் 1902ஆம் ஆண்டு நுழைந்து 1904ல் கலை இளநிலை (‘பி.ஏ) பட்டம் பெற்றார். கல்லூரியில் முதலாவதாக நின்று தங்கப் பதக்கம் பெற்றார். அப்பொழுது அவருக்கு, பிறந்து 16 ஆண்டுகள் தான் (அகவை 16) நிறைந்திருந்தது. பின்னர் 1907ல் இவர் முதுகலை பட்டமும் பெற்றார். அதிலும் இவர் உச்சச் சிறப்புகளோடு பெற்றார்.
முழுமையாக இந்தியாவிலேயே படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.
பொருளடக்கம் 
1 வாழ்க்கை
2 அறிவியலுக்கு இவருடைய ஆக்கப்பணிகள்
3 அறிவியல் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும்
4 சிறப்புக்கள்
5 மேற்கோள்கள்
6 வெளி இணைப்புகள்
வாழ்க்கை

சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே கொல்கத்தாவில் உள்ள அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைகழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். இவர் நவம்பர் 21, 1970ல் இவ்வுலகில் இருந்து பிரிந்தார்.
அறிவியலுக்கு இவருடைய ஆக்கப்பணிகள்

சி. வி. இராமன் 1926ல் இந்திய இயற்பியல் ஆய்விதழ் (Indian Journal of Physics) என்னும் அறிவியல் இதழை நிறுவி அதன் தொகுப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். இந்திய அறிவியல் அறிவுக்கழகத்தைத் (Indian Science Academy) ஆரம்பித்து, பின்னர் தானே அதன் தலைவராகவும் தொடக்கம் முதலாக இருந்து பணியாற்றினார். அதனுடைய அறிவியல் நடப்புகளை வெளியீடு செய்வதிலும் முன் நின்றார். அதுமட்டும் அல்ல இவர் பெங்களூரில் இன்றைய அறிவியல் கழகம் (Current Science Association) என்னும் கழகத்தைத் தொடக்கி, அதன் தலைவராகவும் பணி புரிந்து, அக்கழகத்தின் வழி புகழ் பெற்ற கரன்ட் சயன்ஸ் (Current Science) என்னும் ஒர் அறிவியல் ஆய்விதழையும் நிறுவினார்.
அறிவியல் ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும்

இந்திய இயற்பியல் ஆய்விதழில் (Indian J. Physics) இவர் ‘வெ’ப்ருவரி 28, 1928 ல் ஒரு புதிய ஒளிர்ப்பாடு (கதிர்வீச்சு) A new Radiation என்னும் தலைப்பில் தம் ஆய்வுக்கண்டுபிடிபுகளின் முடிவுகளை வெளியிட்டார். இப்புது அறிவியல் ஒளி விளைவுதான் இவருக்கு நோபல் பரிசு பெறவும் தன் பெயரால் ஒரு அறிவியல் விளைவு பெயர் பெறவும் வழி வகுத்தது. இந்திய ஆய்விதழில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வயலின் (பிடில்) , மிருதங்கம் போன்ற இசைக்கருவிகள் பற்றியும் நன்கு ஆய்வு செய்து புதுக் கண்டுபிடிப்புகள் செய்துள்ளார்.
பகலில் வான் ஏன் நீல நிறமாக இருக்கின்றது என்பது பற்றியும் இவர் விளக்கியிருக்கிறார்.
இவருடைய உடன்பிறந்தாரின் மகனான சுப்பிரமணியன் சந்திரசேகரரும் நோபல் பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்புக்கள்

இவருக்கு லண்டனிலுள்ள ராயல் சொசைட்டியின் ஃபெல்லோசிப் 1924 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
பிரிட்டிஷ் அரசு இவருக்கு 1929 ஆம் ஆண்டில் "நைட் ஹீட்" எனும் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
1929ல் ஆண்டில் இங்கிலாந்து அரசியாரால் சர் பட்டம் அளிக்கப் பட்டது.[1]
இத்தாலி நாட்டின் உயர்பதக்கமான "மேட்யூச்சி" பதக்கம் வழங்கப்பட்டது.
மைசூர் அரசர் "ராஜ்சபாபூசன்" பட்டத்தை 1935 ஆம் ஆண்டில் வழங்கினார்.
பிலிடெல்பியா நிறுவனத்தின் "பிராங்க்ளின்" பதக்கம் 1941 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.
இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது 1954 ஆம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.
1957 ஆம் ஆண்டில் அகில "உலக லெனின் பரிசு" அளிக்கப்பட்டது.

திங்கள், டிசம்பர் 26, 2011

GREAT PHYSICISTS


புகழ்பெற்ற இயற்பியலாளர்கள்



 புகழ்பெற்ற ஆரம்பகால இயற்பியலாளர்கள்

பெயர் பிறந்த இடம் காலம்
ஆர்க்கிமிடீஸ் சிராக்கூஸ் கி.மு.287 - 212
அரிஸ்ட்டாச்சஸ் சாமோஸ் கி.மு.310 - 230
ராபர்ட் பொய்லே இங்கிலாந்து 1627 - 1691
டிமோக்கிறிட்டஸ் அப்தேரா கி.மு.460 - 360
ரெனே டெஸ்கார்ட்டெஸ் பிரான்ஸ் 1596 - 1650
கலீலியோ கலிலி இத்தாலி 1564 - 1642
வில்லியம் கில்பர்ட் இங்கிலாந்து 1544 - 1603
ஹேராக்கிளீடஸ் பொண்டிகஸ் கிரீஸ் கி.மு.387 - 312
ராபர்ட் ஹூக் இங்கிலாந்து 1635 - 1703
கிறிஸ்டியன் ஹுய்ஜென்ஸ் - 1629 - 1695
லுக்கிறீட்டியஸ் ரோம் கி.மு.98 - 55
ஐசாக் நியூட்டன் இங்கிலாந்து 1642 - 1727
பிளைஸ் பஸ்கல் பிரான்ஸ் 1623 - 1662
வில்லெபுரோட் சினெல் நெதர்லாந்து 1580 - 1626
இவாஞ்செலிஸ்டா தொரிசெல்லி இத்தாலி 1608 - 1647
ஜொஹான்னெஸ் கெப்லர் ஜெர்மனி 1571 - 1630

 18 ஆம் நூற்றாண்டின் பிரபல இயற்பியலாளர்கள்

பெயர் பிறந்த இடம் காலம்
ஜீன் லே ரொண்ட் டி'அலெம்பர்ட் பிரான்ஸ் 1717 - 1783
டானியல் பெர்னோலி சுவிற்சர்லாந்து 1700 - 1782
ருட்ஜெர் ஜொசிப் பொஸ்கோவிச் துப்ரோவ்னிக் 1711 - 1787
ஹென்றி காவெண்டிஷ் பிரித்தானியா 1731 - 1810
சார்ள்ஸ் அகஸ்டீன் டி கூலம் - 1736 - 1806
லியொன்கார்ட் இயூலர் - 1707 - 1790
கபிரியேல் பரன்ஹீட் போலந்து 1686 - 1736
பெஞ்சமின் பிராங்க்ளின் ஐக்கிய அமெரிக்கா 1706 - 1790
ஜேம்ஸ் வாட் ஸ்கொட்லாந்து 1736 - 1819

 19 ஆம் நூற்றாண்டின் பிரபல இயற்பியலாளர்கள்

பெயர் பிறந்த இடம் காலம்
ஏர்ணெஸ்ட் அப்பே ஜெர்மனி 1840 - 1905

20 ஆம் நூற்றாண்டின் பிரபல இயற்பியலாளர்கள்

பெயர் பிறந்த இடம் காலம்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஜெர்மனி 1879 - 1955
சி. வி. ராமன் இந்தியா 1888 - 1970
ஸ்டீபன் ஹோக்கிங் இங்கிலாந்து 1942 -
லொரன்சு இங்கிலாந்து 1853 - 1928

RAMAN EFFECT


இராமன் விளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை சர்.சி.வி.ராமன் 1928- ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இவ்வாறு சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்பிற்காக இராமனுக்கு 1930- ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பொருளடக்கம்

 

ராமன் விளைவு என்றால் என்ன?

ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது; இவ்வாறு சிதறும் ஒளி மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது.[1] அவை
  • படுகதிருக்குச் சமமான அலைநீளமுள்ள முதன்மை அல்லது ராலே வரி;
  • முதன்மை வரியைவிட அதிக அலைநீளமுள்ள ஸ்டோக்சு வரிகள்;
  • முதன்மை வரியைவிட குறைவான அலைநீளமுள்ள எதிர் ஸ்டோக்சு வரிகள்;

பயன்பாடுகள்

இயற்பியலை விட வேதியியலில் இராமன் சிதறல் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கரிம, கனிம வேதியியலில் சிதைவுறுத்தா வேதிப்பகுப்பிற்கு முதன்மையாக பயன்படுத்தப்படுவது இராமன் விளைவே. பகுப்பிற்குட்பட்ட பொருளின் “கைரேகை” யாக இராமன் நிறமாலை உள்ளது; திரவங்களுக்கு மட்டுமல்லாது வளிம, திடப்பொருள்களுக்கும் இம்முறையைப் பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு.
  • பெட்ரோலியவேதித் தொழில், மருந்தாக்கத் தொழில் ஆகியவற்றில் தயாரிப்புகளைக் கண்காணித்தல்,
  • சட்டப்புறம்பான போதை மருந்துகளை எடுத்துச்செல்ல பயன்படும் உறைகளைச் சிதைவுறுத்தாமலேயே அவ்வகையான மருந்துகளை இனம் காணல்,
  • வண்ணப்பூச்சுகள் இருகும்போது எவ்வித மாற்றங்களை அடைகின்றன என்பதை அறிதல்,
  • அணுக்கருக் கழிவுகளை தொலைவிலிருந்தே ஆய்வு செய்தல்,
  • 10 -11 வினாடியே ஆயுட்காலம் கொண்ட நிலையற்ற வேதி இனங்களின் நிறமாலைகளை பதிவு செய்வதில் ஒளிவேதியலாளர்கள், ஒளிஉயிரியலாளர்களுக்கு லேசர்-இராமன் நிறமாலையியல் தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. 

ARINTHU KOLVOOM


ARINTHU KOLVOOM


Aurangzeb T0000253 104.jpg
  • முகலாயப் பேரரசர்கள் அமர்ந்து ஆட்சி செய்த மயிலாசனம் (படம்) பாரசீகப் பேரரசர் நாதிர் ஷாவால் கவர்ந்து செல்லப்பட்டது.
  • இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் பொது வாக்கெடுப்பு 1982 இல் நடைபெற்றது.
  • மரபணு இருக்கை என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும்.
  • இறைவனையோ சிறப்புப் பெற்ற மனிதர்களையோ குழந்தையாக உருவகித்துப் பாடப்படும் தமிழ் சிற்றிலக்கியங்கள் பிள்ளைத்தமிழ் வகையைச் சேர்ந்தவை.
  • கர்வா சௌத் என்னும் இந்து சமய விழா நாளில் சூரிய உதயம் முதல் நிலவு உதயம் வரை திருமணமான பெண்கள் உண்ணாதிருந்து தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர்.

VEERA SAVARKAAR


வினாயக் தாமோதர் சாவர்க்கர்


வினாயக் தாமோதர் சாவர்க்கர்
Savarkar3xt.jpg
வினாயக் தாமோதார் சாவர்க்கர்
பிறப்பு மே 28 1883
பாகூர், பிரித்தானிய இந்தியா
இறப்பு பெப்ரவரி 26 1966 (அகவை 82)
மும்பை, இந்தியா
வலீந்து ஏற்ற வலியில்லா மரணம் யூதனேசியா
தேசியம் இந்தியர்
வேறு பெயர்கள் வீர் சாவர்க்கர்
அறியப்படுவது இந்திய சுதந்திரபோராட்ட இயக்கம், இந்துத்வா
கல்வி பெர்குசன் கல்லூரியி, புனே, இளங்கலை பட்டம்
அரசியல் கட்சி இந்து மாகா சபை
சமயம் இறை மறுப்பாளர், இந்துத்வம்
வாழ்க்கைத்
துணை

யமுனா பாய்
பிள்ளைகள் மகன்கள் பிராபாகர் (குழந்தையிலேயே இறப்பு), விஷ்வாஸ் சாவர்க்கர், மகள் பிராபாத்-தாய் சிபுலங்கர் ( அவரின் திருமணத்திற்குப் பின்)
வினாயக் தாமோதர் சாவர்க்கர் (Vinayak Damodar Savarkar) (பிறப்பு மே 28, 1883, பகதூர்- இறப்பு பெப்ரவரி 26, 1966, மும்பை) இந்துத்வா வில் அதிக நாட்டம் கொண்ட இந்திய அரசியல்வாதியும் , சுதந்திர போராட்ட வீரருமான இவர் வீர் சாவர்க்கர் (துணிவுமிக்க சாவர்க்கர்) என அனைவராலும் அறியப்படுகிறார். இந்து தேசியவாதிகளின் மைய உருவமாகக் கருதப்படுகிறார். அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் ஆங்கில அரசால் சிறைச்சாலையிலிருந்து வெளியே வாழ அனுமதிக்கப்பட்ட பின்னர்,சாதி பேதங்களைக் களைதல் போன்ற சமூக சீர்த்திருத்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். இவர் ஒரு இறை மறுப்பாளரும் கூட. இவரின் இறுதிகால வாழ்க்கை மாகாத்மா காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட பின்னணியுடன் கூடியது. பின்னர் நீதிமன்றம் இவர் குற்றமற்றவர் எனக்கருதி விடுதலை செய்தது.


 கல்வி மற்றும் புரட்சி
சாவர்க்கரின் புரட்சி அவரின் இந்தியா மற்றும் இங்கிலாந்தில் கல்வி பயிலும் பருவத்திலேயே துவங்கியது. அங்குள்ள இந்தியா இல்லத்தில் மாணவர்களுடன் சேர்ந்து அவினவ் பாரத் சங்கம் என்ற சுதந்திர இந்தியா சங்கத்தை உருவாக்கி சுதந்திரத் தாகத்தை இளைஞர்களிடம் ஏற்படுத்தினார். 1857 ல் ஏற்பட்ட இந்தியப் பிரிவினையை எதிர்த்து எழுதிய இந்திய சுதந்திரத்திற்கான போர் என்ற நூல் பிரித்தானியரால் தடை செய்யப்பட்டது. 1910 ஆண்டு இந்தியா இல்லத்தில் இருந்த புரட்சியியாளர்களுடன் தொடர்பினால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லும் வழியில் பிரான்சின் மார்செய்ல்ஸ் துறைமுகத்தின் அருகே தப்பிக்க முயன்றதால் 50 ஆண்டுகால சிறைத்தண்டணைக் கொடுக்கப்பட்டு அந்தாமான் சிற்றறைச் சிறைக்கு அனுப்பப்பட்டார். இச்சிறையில் இந்து தேசியவாதத்தை வெளிப்படையாக ஆதரித்து கட்டுரை எழுதினார். 1921 ல் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

 சிறந்த பேச்சாளர்

சாவர்க்கர் மிகச் சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவருடைய எழுத்துக்கள் பெரும்பாலும் இந்து அரசியலையும், சமூக ஒற்றுமையும் பறைசாற்றின. மேலும் சாவர்க்கர் இந்தியா இந்துக்களின் நாடு என்றும் அதை இந்து இராச்சியம் (இந்து ராஷ்டிரியா) என அழைக்க வலியுறுத்தினார். இதன் காரணமாக 1942 ல் அமைக்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு (குவிட் இந்தியா முழக்கம்) இயக்கத்தினை எதிர்த்தார். பிரிவினைக்கு ஆதரவளித்த இந்திய தேசிய காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். இதன் காரணமாக நிகழ்ந்த காந்தி படுகொலையில் நீதிமன்றம் அவரை குற்றவாளியில்லை என்று விடுவிக்கும் வரை குற்றம்சாட்டப்பட்டவராயிருந்தார். அவரின் இறுதி காலங்களை இந்துத்வாவை தன் எழுத்துக்களின் மூலம் விரிவாக்குவதில் செலவிட்டார்.

 இறப்பு

பிப்ரவரி 26, 1966, யூதனேசியா (Euthanasia) என்ற மருத்துவ சொல்லால் அழைக்கப்படும் வலியில்லா மரணத்தை (கருணைக்கொலை என்றும் கூறுவர்.) வலீந்து (Voluntarily)ஏற்று இறப்பைத் தழுவினார். இவர் இறுதி மரியாதையில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இவர் பயன்படுத்தியப் பொருட்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

GREAT INDIAN INSPRITIONS


Leaders

Bhagat SinghIndia is a land of great political leaders who ruled the country effectively and also by protecting its national interest. It was not an easy task to accomplish, keeping in view the changes taking place in the world political scenario. Leaders like Pandit Jawaharlal Nehru, Lal Bahadur Shastri and Indira Gandhi Bose played an indispensable role in changing the perspective of world towards India. The manner, in which issues like border disputes, Kashmir and growing shortage of food grains were handled, they really deserve an honor. The far-sightedness and pragmatic characteristics of the leaders can be assumed from the fact that they framed the Constitution of India by inducting the best possible clauses of the world. They led the country from the front, without being showing any inclination to either of the power blocs. To know more about the political leaders of India, read the brief biography of the Indian political leaders.
Bal Gangadhar Tilak was a social reformer and freedom fighter. He was one of the prime architects of modern India and strongest advocates of Swaraj (Self Rule). He was universally recognized as the "Father of Indian Movement".

Bhagat Singh
Bhagat Singh was among the prominent revolutionaries who shaped the base of a grand national movement. Following his execution, on March 23, 1931, the supporters and followers of Bhagat Singh regarded him as a "Shaheed", "martyr".

Chandrasekhar Azad
A contemporary of Bhagat Singh, Chandrasekhar Azad was a born firebrand revolutionary. He engaged in a heroic battle against the British. His role was crucial in inspiring the others of his generation to participate in the national movement for freedom.

Gopal Krishna Gokhale
Gopal Krishna Gokhale was one of the pioneers of the Indian Independence Movement. Gokhale was a senior leader of the Indian National Congress. He was one of the most learned men in the country, a leader of social and political reformists and one of the earliest and founding leaders of the Indian Independence Movement.

Indira Gandhi
Indira Gandhi was, undoubtedly, one of the greatest political leaders of India. She was the first and only woman to be elected as the Prime Minister. She is also regarded as the most controversial political leader of the country for her unprecedented decision of imposing "a state of emergency".

Jawaharlal Nehru
Jawaharlal Nehru was the first Prime Minister of independent India. He was a member the Congress Party that led the freedom movement against British Empire. Nehru was one of the architects who had the opportunity to steer the newly freed-nation. He was also the chief framer of domestic and international policies between 1947 and 1964.

Lala Lajpat Rai
Lala Lajpat Rai immensely contributed in attaining independence the nation. He helped in establishing few schools in the country. He also initiated the foundation of Punjab National Bank. In 1897, he founded the Hindu Orphan Relief Movement to keep the Christian missions from securing custody of these children.

Lal Bahadur Shastri
He devoted his life for the pride and honor of the country. Shastri was regarded as man of principles. Lal Bahadur Shastri offered his resignation as Union Railway Minister; hours after he was made aware of a train accident that killed around 150 people.

Maulana Abul Kalam Azad
Indira GandhiMaulana Abul Kalam Azad was a renowned journalist of his time. Disturbed by his provocative articles, the British Government decided to deport him off Calcutta. Despite of his house-arrest and imprisonment, Maulana Abul Kalam Azad continued to write against the anti-people policies of the British Government.

Netaji Subhash Chandra Bose
Netaji Subhash Chandra Bose was a freedom fighter of India. He was the founder of the Indian National Army. During pre-independence period Netaji had visited London to discuss the future of India, with the members of the Labor party.

Dr. Rajendra Prasad
Rajendra Prasad was a great leader of the Indian Nationalist Movement and also one of the architects of the Indian Constitution. He was elected as the first President of Republic of India. Rajendra Prasad was a crucial leader of the Indian Independence Movement, who left his lucrative profession to participate in the nationalist movement of India.

Rajiv Gandhi
Rajiv Gandhi was one of the popular Prime Ministers of India. The developmental projects launched by him include the national education policy and expansion of telecom sector. Besides his achievement and subsequent popularity, Rajiv Gandhi also emerged as one of India's controversial Prime Ministers.

Sardar Vallabhbhai Patel
Vallabhbhai Patel was one of the great social leaders of India. He played a crucial role during the freedom struggle of India and was instrumental in the integration of over 500 princely states into the Indian Union. Despite the choice of the people, on the request of Mahatma Gandhi, Sardar Patel stepped down from the candidacy of Congress president.

Sarojini Naidu
Sarojini Naidu was truly one of the gems of the 20th century India. She was known by the sobriquet "The Nightingale of India". Her contribution was not confined to the fields of politics only but she was also a renowned poet. The play "Maher Muneer", written by Naidu at an early age, fetched a scholarship to study abroad.




HARD WORK


சாதனைப் பெண்கள்:கடுமையான உழைப்பே வெற்றிக்கு சிறந்த வழி! - சாய்னா நெவால்


பேட்மிண்டன் போட்டியில் மிக இளம் வயதில் அதிக தங்கம் வென்று, தங்க மங்கையானவர் சாய்னா நெவால். 21 வயதான இவர் கேல் ரத்னா விருதும், காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றவர்.
Saina Nehwal speaks about her Success in Badminton - Women Secrets of Success
பேட்மிண்டன் தரவரிசையில் தொடர்ந்து முன்னணி வீராங்கனையாக நிலைத்து வரும் சாய்னா, 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல நிறைய வாய்ப்பு இருப்பதாக விளையாட்டுத் துறை நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
அவரது வாழ்க்கைப் பயணம் இங்கே...
1990-ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதி அரியானா மாநிலத்தில் உள்ள கிசார் என்ற ஊரில் பிறந்தார். பெற்றோர் பெயர் ஹர்விர் சிங் - உஷா நெவால். இவரது தந்தை விஞ்ஞானி. எண்ணைவித்து ஆராய்ச்சி மையத்தில் இயக்குநராக இருக்கிறார். சாய்னாவின் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காக அவர்கள் ஐதராபாத்தில் குடியேறினார்கள்.
8 வயதிலேயே சாய்னா பேட்மிண்டன் விளையாட தொடங்கிவிட்டார். அப்போது அவரை அவரது தந்தை நானி பிரசாத் என்ற பயிற்சியாளரிடம் அழைத்து சென்றார். சாய்னாவின் ஆர்வத்தையும் திறமையையும் கண்ட பயிற்சியாளர் உடனே பயிற்சி கொடுக்க சம்மதித்துவிட்டார்.
2002-ம் ஆண்டு முதல் தன் திறமையால் வேகமாக வெற்றிகளை குவிக்கத் தொடங்கினார். வெற்றிகளை குவித்துக் கொண்டே வந்ததால் அவருக்கு பண உதவி செய்ய பல நிறுவனங்கள் போட்டிபோட்டன. தற்போது அவர் 'ஒலிம்பிக் கோல் கெஸ்ட்' என்ற அமைப்பின் ஆதரவில் விளையாடி வருகிறார்.
2009 ஜூன் 21-ந்தேதி சாய்னா ஒரு சாதனை படைத்தார். முன்னணி தரவரிசை வீரரான சீனாவைச் சேர்ந்த வாங் லின் என்பவரை மலைக்க வைக்கும் புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதனால் இந்தோனேசியா ஓபன் சீரிஸ் பட்டத்தை வென்றார்.
இதே ஆண்டு அவரை அம்மை நோய் பாதித்தது. இருந்தாலும் சகித்துக்கொண்டு ஆவேசமாக ஆடிய அவர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடந்த உலக சாம்பியன் பட்டத்தையும் வென்றார். அப்போது "என் பெயரையும், சானியா மிர்சா பெயரையும் மக்கள் குழப்பிக் கொள்கிறார்கள். இந்த வெற்றி மூலம் அந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். இது எனது செயல்திறனை வெளிக்காட்டி உள்ளது. எனது பெயரையும், எனது முகத்தையும் பலருக்கும் அறியச் செய்துள்ளது. இனி பெயர் குழப்பம் வராது" என்றார்.
2010 ஜூன் மாதம் நடந்த சிங்கப்பூர் ஓபன் தொடரில் மீண்டும் சூப்பர் சீரிஸ் பட்டம் வென்றார். அதே ஆண்டில் தொடர்ந்து இந்தோனேசியன் ஓபன் தொடரையும் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்த தொடர் வெற்றி அவரை தரவரிசையில் 3-வது இடத்துக்கு உயர்த்தியது. அதே ஆண்டு இறுதியிலே ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பட்டத்தையும் வென்றார். அப்போது "கடுமையான உழைப்பே வெற்றிக்கு சிறந்த வழி என்பதை நான் சிறு வயதிலே உணர்ந்துவிட்டேன். அப்போதெல்லாம் நான் பயிற்சிக்காக தினமும் 25 கி.மீ. பயணம் செய்தேன்" என்றார்.
இந்த ஆண்டு தசைநார் பாதிப்புக்காக சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பிறகு களமிறங்கிய அவர் சுவிஸ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார். இப்படியே அவருடைய வெற்றிப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.