Translate

ஞாயிறு, ஜனவரி 01, 2012

பாம்பு தின்னும் ஊரில்

ஆடி அடங்கும் வாழ்க்கை 

 
 யாருக்கு ?


அநியாயம் புரியாதவனுக்கா ?


அமைதியாக வாழ்பவனுக்கா ?

 
அண்ணா ஹசர 1000 பேர் வந்தாலும்

 
உனக்கு சாவே கிடையாது ஊழலே ,

 
திருகடைஊர் செல்ல வேண்டியதில்லை நீ 


உன்னை பூஜிக்க சாதாராண மனிதனும் வேண்டும் 


இல்லாவிட்டால் அவனை இவ்வுலகம் 


பொல்லாதவன் ஆக்கிவிடுதே 


பைத்தியம் அவனுக்கு பிடித்து விட்டது 


என்றல்லவோ நகைக்கிறது 


அவனும் ஒரு நாள் 


உன்னை பூஜிக்க சாதாராண மனிதனும் வேண்டும் 


இன்றே என்றல்லவோ அவனும் 


வேகமாய் கேவி சிரிக்கிறான் 


பாம்பு தின்னும் ஊரில் தலை எனக்கு 


என்று வெடுக்கென்று தின்பதைப் பார்த்தால் 


அவனை போல் ஒருவன் 


நானும் ஆகி விடுவேன் என்பதில் 


ஊழலளவும் சந்தேகமில்லை 
                           சேது ராமன் .இரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக