Translate

வெள்ளி, அக்டோபர் 31, 2014

தலை முப்பது துண்டுகளாச்சிதறியும் மீண்ட அபூர்வ மனிதன்.....Man's skull shattered into 30 pieces ...He is alive....

  •   ஜாக் மார்டின்டேல் [25] தனது காதலி மற்றும் நண்பருடன் புதுவருட கொண்டாட்டத்திற்காக 2010 ல் காரில் லண்டன்   north circular சென்றபோது ஏற்பட்ட விபத்தில் நண்பனை இழந்தார் ,காதலி கோமாவிலிருந்து இன்றும் எழவில்லை.....

  • ஜாக் மார்டின்டேலின் முப்பது துண்டுகளாகப்போன முகத்தை ஒன்பது டைட்டேனியம் தகடுகளையும் 33 உலோக  திருகுகள் [screws] கொண்டு மருத்துவர் ஐந்து மணிநேர போராட்டத்திற்குப்பிறகு ஒழுங்குபடுத்தினார்.  

  • மூன்று மாதங்கள் கோமாவிலேயே இருந்தார்.மருத்துவர்கள் பிறரைச்சார்ந்தே இவரால் வாழ முடியும் என்றனர்.

  • அனைவரின் மறுப்பையும் மீறி தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டார்...மேலும் தனது மீண்ட வாழ்க்கை குறித்து புத்தகமும் எழுதிவருகிறார் .

  • அந்த புத்தகத்தின் விபரம் Battling A Brain Injury: The Life That Jack Built.

  • அவரது இணைய முகவரி http://www.brainpain.co.uk/

  • He writes: 'The bitter irony is that I do not even want to identify particularly with those who’d be able to relate to my situation; everything about the state that I have been left within is something that I have desperately urged to veer away from.

  • 'There are certainly optimistic things that have arisen as a result of the catastrophic accident that I was involved in, only I’ve moved beyond believing that they can ever balance out my horrific ordeals.'


                 Carefree: Then aged 21, Jack had been in his final year of an English degree at the University of York. He was leaving a party with Chelsea their friend Carrie and two others in Barnet, north London, when they were hit
சோகம்: விபத்து நடைபெறுவதற்கு  சில மாதங்களுக்கு முன் தனது  காதலி              செல்சியா   கேனானுடன்  




                    Shattered: This is Jack's x-ray showing how his skull was shattered into 30 pieces. A surgeon dedicated himself to rebuilding Jack's face using nine titanium plates and 33 metal screws in a five-hour operation
இங்கே காண்பது ஜாக் மார்டின்டேலின் முப்பது துண்டுகளாகப்போன   தலையின் எக்ஸ்ரே படம். 




                   Horrific: Jack Martindale, 25, pictured left this year, less than five years after he was slammed into a coma, right, by a speeding driver in the early hours of New Year's Day 2010, leaving him with permanent brain damage

 ஜாக் மார்டின்டேலின் சுயநினைவு இல்லாத நிலை. 




                      Looking forward: Having now written a book about his experiences, Jack has defied doctors' expectations 
                                         
     ஜாக் மார்டின்டேலின் தற்போதைய  படம் .






வியாழன், அக்டோபர் 30, 2014

இருவாய்ச்சி-என்னும் இருவாட்சி.....[Horn bill]...ஓர் அழகிய பறவை

      இருவாட்சி என்பது இருவாச்சி இனப்பறவைகளின் குடும்பப்பெயர் ஆகும். ஆங்கிலத்தில் இக்குடும்பத்தை "ஹார்ன்பில்" Horn bill என அழைப்பார்கள். இவை அளவில் சற்று பெரிதானவை. பறக்கும்போது ஒரு உலங்கு வானூர்தி [Helicopter] பறப்பதைப் போல இருக்கும். அதே போல ஒலி எழுப்பக்கூடியவை. பெரிய அலகை உடையது. அலகுக்கு மேலே கொண்டை (காஸ்க்) போன்ற அமைப்பு இருக்கும். இது பறவைக்கு இருவாய்கள் இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தரும். இவை சுமார் 30 முதல் 40 ஆண்டுகள்  வாழக்கூடியது. 


A pair of Knobbed Hornbills (also known as Sulawesi Wrinkled Hornbill) at Walsrode Bird Park, Germany. The female is in the foreground and the male is behind.

கூடு

   இருவாச்சி பறவைகள் இணையோடு வாழக்கூடியவை. இனப்பெருக்க காலத்தில் இரண்டு பறவைகளும் சேர்ந்து மிகவும் உயரமான மரங்களில் கூட்டைத் தேர்வு செய்யும். கூடு என்பது மரங்களில் உள்ள பொந்துகள்தான். பெண் பறவை பொந்துக்குள் சென்று அமர்ந்தவுடன் ஆண் பறவை தனது எச்சில் மற்றும் ஆற்று படுகைகளில் இருந்து சேகரிக்கும் ஈரமான மண்ணைக் கொண்டு கூட்டை மூடிவிடும். பெண் பறவைக்கு உணவு கொடுக்க ஒரு சிறிய துவாரத்தை மட்டும் விட்டுவிடும்.

Indian Grey Horn bill
   பெண் பறவை தனது இறக்கை முழுவதையும் உதிர்த்து ஒரு மெத்தை போன்ற தளத்தை அமைத்து அதன் மேல் ஒன்று முதல் 3 முட்டைகள் வரை இடும். சுமார் 7வாரம் கழித்து முட்டைகள் பொரிந்துவிடும். குஞ்சுகள் பிறந்தவுடன் பெண் பறவை கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும். அதுநாள் வரை ஆண் பறவை சிறிய துவாரம் வழியே பெண் பறவைக்குப் பழக்கொட்டைகள், பூச்சிகளை உணவாக கொண்டுவந்து ஊட்டும். குஞ்சுகள் பொரிந்தபின்னர் ஆண் மற்றும் பெண் பறவைகள் இணைந்து குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும். இப்பறவைகளை மழைக்காட்டின் குறியீடு என்பர்.

Greater Indian Hornbill [Buceros bicornis]

இனப்பெருக்க காலம்

பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை இனப்பெருக்க காலமாகும்
Helmeted Horn bill-Buceros

உணவு

அனைத்துண்ணிகளான இருவாச்சிகள் பழங்கள் ,பூச்சிகள் , சிறு விலங்குகள் முதலியவற்றை உண்ணும். மேலும் இவற்றின் நாக்கு குட்டையாக இருப்பதால் இவற்றால் இரையை விழுங்க இயலாது.  
 Drawing of two great Indian hornbills (Buceros bicornis). One is completely visible (the male) and with its bill is reaching a fig to its mate through a small opening in a tree out of which the mate's bill is partially visible.

எனவே உணவை அலகின் நுனியில் இருந்து தூக்கிப்போட்டு சிறிது சிறிதாக அலகின் உட்பகுதிக்கு நகர்த்தும்.

Philippines Horn bill

   கேரள மாநிலத்தில் இருவாச்சிகளை மாநிலப் பறவையாக அறிவித்துள்ளனர். இலக்கியங்களில் இவற்றை மலை முழுங்கான் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மலபார் இருவாச்சி

   தமிழகத்தில் காணப்படும் நான்கு வகை இருவாச்சிப்பறவைகள் 1. பெரும் பாத இருவாச்சி, 2. மலபார் இருவாச்சி, 3.சாம்பல் நிற இருவாச்சி, 4. மலபார் பாத இருவாச்சி. இவை மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்னிந்தியாவில் காணப்படுபவை.


செவ்வாய், அக்டோபர் 28, 2014

எபோலா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பணியாளர்களின் பரிதாப நிலை -African nurses risking their lives to treat ebola patients revealed

*செவிலியர்கள் வாடகை வீடுகளிலிருந்து            வெளியேற்றப்பட்டனர்.

 

*குடும்ப உறுப்பினர்கள் ,நண்பர்கள் இவர்களை தவிர்க்கின்றனர்.

 

இவர்களுக்கு வாடகை வீடு மக்களால் தரப்படுவதில்லை

 

இவர்கள் தங்கியுள்ள அறை ஜன்னல் வழியாக சூரிய ஒளி வெளிச்சம் நிரம்ப வருகிறது, தடைபட்ட..., காற்றோட்டமில்லாத மற்றும் சூடான அறையாக   உள்ளது.

 

*57 சதவீத நோயாளிகளை இவர்களது சிகிச்சை சென்றடைந்துள்ளது. 

 

* தங்களது உயிரையும் பொருட்படுத்தாது நோயுற்ற மக்களுக்கு இவர்கள் செய்யும் சேவை உலகில் ஆங்காங்கே மனிதம் பிழைத்திருக்கிறது என்பதற்கு சான்று........

 

*நோயுற்ற மக்களின் கண்களுக்கு  இவர்கள் மண்ணில் உலவும் தெய்வங்கள் என்பது உண்மை தானே........

 

* லைபீரியா மற்றும் லியோனி இவையே எபோலாவால் மோசமாகபாதிக்கப்பட்ட நாடுகள்....அங்கேதான் இவையெல்லாம்... 

 

*Liberia and Sierra Leone are the countries worst hit by the epidemic... 


Difficult: For nurses such as Alieu Kamara, treating ebola patients has led to them being shunned by locals

Difficult: For nurses such as Alieu Kamara, treating ebola patients has led to them being shunned by locals

Dangerous: Nurses are also expected to treat people living in the local area and help them avoid the disease 
 Dangerous: Nurses are also expected to treat people living in the local area and help them avoid the disease

Cramped: The women's staff room at Hastings Ebola Treatment Centre is steps away from the wards 
 Cramped: The women's staff room at Hastings Ebola Treatment Centre is steps away from the wards

திங்கள், அக்டோபர் 27, 2014

பூனைக் கண்காட்சி பராகுவேயில் -World's biggest cat show in Prague



நாய்க்கண்காட்சி தான் கேள்விபட்டிருப்போம் ஆனால் இங்கே  பூனைக் 

கண்காட்சி பராகுவேயில் 



     Some of the fanciest felines on the planet went paw to paw at an international cat show in Prague over the weekend. 
     Cats of every kind, from Persian and exotic breeds, to the humble house cat, were judged on everything from their markings to their physical characteristics, in a claws-and-all competition to be named best in breed, 
Around 1,600 cats were shown at the event, which is said to be the biggest cat show of the year.  

 Living large: A member of the judging committee at the cat show, checks the length and form or the feline

 And what was your name?: A judge takes a close looks at a short haired breed, who cowers on the stage


 Pirate life: A syphx closes one eye and licks its lips while taking a break in a blanket between judging



Love is blind: The owner of a hairless sphynx shows her hairless friend some affection













ஞாயிறு, அக்டோபர் 26, 2014

26 வயது ஈரானியப் பெண்ணின் பரிதாப முடிவு-The Iranian woman executed for killing a man

Reyhaneh Jabbari -26 வயது ஈரானியப் பெண் ரிஹணா ஜப்பாரி

      தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற அரசு அதிகாரியை தற்காப்புக்காக கொலைசெய்த ஈரானியப் பெண் ரிஹணா ஜப்பாரி நேற்று பல நாடுகள் .., அம்னெஸ்டி அமைப்பு    ,மற்றும்  மனிதஉரிமை அமைப்புகளின் ..கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அந்நாட்டு அரசால் தூக்கிலிடப்பட்டாள்... 
 Put to death: Reyhaneh Jabbari was hanged at dawn on Saturday morning despite calls for clemency




 This tribute appeared on the Facebook page dedicated to the 27-year-old titled Save Reyhaneh Jabbari From Execution In Iran
 This tribute appeared on the Facebook page dedicated to the 26-year-old titled Save Reyhaneh Jabbari From Execution In Iran

'Please don't cry. I love you. I wish I could have hugged you until I died': Iranian woman's heartrending message to her mother before she was hanged for killing the man who 'tried to rape her'

  • Reyhaneh Jabbari, 26, was sentenced to death in 2009 by an Iranian court
  • She was found guilty of murdering a government intelligence operative  
  • Her mother Sholeh Pakravan received a phone call on Friday telling her to visit her daughter in prison for the last time
  • Amnesty International failed in last-ditch bid to spare Jabbari's life
  •  Jabbari also asked that her organs were donated anonymously, according to The Sunday Times.


 

மாங்குயில்-Eurasian golden oriole

மாங்குயில்  
                      உடலில் மஞ்சள் நிறமும் இறக்கையில் கறுப்பு நிறமும் கொண்ட பறவை. இதன் அறிவியல் பெயர் ஓரியோலசு ஓரியோலசு(Oriolus oriolus). கண்ணருகேயும் கறுப்புத் திட்டுகள் இருக்கும். ஏறாத்தாழ 22-25 செ.மீ  (9-10 அங்குலம்) நீளமுடைது. வீட்டுக் குருவியை விடப் பெரியது. சற்றேறக்குறைய மைனா  அளவுடைது. இது மாமரத்தில் காணப்படுவதாலும், மாம்பழம் போல் மஞ்சளாக  இருப்பதாலும் மாங்குயில் எனப்படுகின்றது. இதன் குரல்  இனிமையாக இருக்கும் . மாங்குயில் முட்டைகள் வெளிரிய இளம் பழுப்பு நிறத்தில் கரும்புள்ளிகளுடன் இருக்கும். கூட்டில் 3-4 முட்டைகள் இருக்கும். இதன் குஞ்சுகள் இளம்பச்சை நிறத்தில் இருக்கும். குஞ்சுகளின் தொண்டை,, நெஞ்சுப்பகுதிகளும் அடிப்பகுதிகளும் வெள்ளை நிறத்தில் இருக்கும் அடர்ந்த நிறத்தில் கோடு கோடாக இருக்கும். 
Pirol

மாங்குயில் கூவுவதைக்கேட்க http://www.nabu.de/aktionenundprojekte/vogeldesjahres/1990-derpirol/

             தலையில் கறுப்பாக உள்ள மாங்குயில் வேறு இனம், அதன் பெயர்கருந்தலை மாங்குயில் (அறிவியல் பெயர் ஓரியோலசு காந்தோமசுOriolus xanthomus). ஓரியோலசுக் குடும்பத்தைச் சேர்ந்த இவை தவிர மாங்குயில் போலவே தோற்றம் அளிக்கும் அமெரிக்க மஞ்சக்குயில்கள்  ஆங்கிலத்தில் ஓரியோல் (Oriole) என்னும் அதே பெயரால் அழைக்கப்பட்டாலும் அவை முற்றிலும் வேறு பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அமெரிக்க மஞ்சக்குயில்கள் அறிவியல் வகைப்பாட்டின்படி இக்டேரசு (Icterus) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை.

வியாழன், அக்டோபர் 23, 2014

அல்பைன் ஆடுகள் காலநிலை மாற்றத்தால் சிறியதாகி விட்டன , ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை




    அல்பைன் ஆடுகள்  1980 இல் இருந்ததைவிட இப்போது 25 சதவீதம் எடை
குறைவாக உள்ளன ...
     
     உயர் வெப்பநிலை அந்த ஆடுகளின் நடத்தைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தி விட்டது .
     
      இவை உண்மையிலேயே காலநிலை மாற்றத்தினை நேரடியாக எதிர் கொள்ளும் விலங்குகளாகும் .


The Alpine chamois goats now weigh about 25 per cent less than animals of the same age in the 1980s.
   They appear to be shrinking in size as they react to changes in climate, according to new research from Durham University.
    The researchers studied the impacts of changes in temperature on the body size of Alpine Chamois, a species of mountain goat, over the past 30 years.
To their surprise, they discovered that young Chamois now weigh about 25 per cent less than animals of the same age in the 1980s.
   In recent years, decreases in body size have been identified in a variety of animal species, and have frequently been linked to the changing climate.
     However, the researchers say the decline in size of Chamois observed in this study is striking in its speed and magnitude.
    The research,  by the Natural Environment Research Council is published in the journal Frontiers in Zoology.
Lead author Dr Tom Mason, in the School of Biological and Biomedical Sciences, at Durham University, said: 'Body size declines attributed to climate change are widespread in the animal kingdom, with many fish, bird and mammal species getting smaller.
   'However the decreases we observe here are astonishing. 
  'The impacts on Chamois weight could pose real problems for the survival of these populations.'
The team delved into long-term records of Chamois body weights provided by hunters in the Italian Alps.

Ajuvenile Alpine Chamois in the Italian Alps. The research suggests that declining body size is a result of changes in both climate and the density of animals.
They discovered that the declines were strongly linked to the warming climate in the study region, which became 3-4oC warmer during the 30 years of the study.
The team believes that higher temperatures are affecting how chamois behave.
'We know that Chamois cope with hot periods by resting more and spending less time searching for food, and this may be restricting their size more than the quality of the vegetation they eat,' said Co-author Dr Stephen Willis.
'If climate change results in similar behavioural and body mass changes in domestic livestock, this could have impacts on agricultural productivity in coming decades.'
According to the authors, the future plight of the Chamois remains unclear.

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்களின் நிலை- schoolgirls kidnapped by Boko Haram are being used as suicide bombers...

   நைஜீரியாவில் கடத்தப்பட்ட 276-மாணவர்களில்  பத்து வயது நிரம்பிய சிறுமிகளை தற்கொலை குண்டுதாரிகளாக பயன்படுத்தப்பட்டு வருவதாக  மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்... போலீசார்  மீட்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது...... 
   இது நடந்தது சில மாதங்களுக்கு முன்பு ஆனாலும் மனிதம் பிழைத்திட உலக நாடுகள் தலையிடாமல் இருப்பது நைஜீரியா ஏழை நாடு என்பதாலா என்று தெரியவில்லை......


     Fears have been raised that the schoolgirls kidnapped by Boko Haram militants earlier this year are being used as suicide bombers.
     The speculation has arisen after a number of female suicide bombings in Nigeria's biggest city of Kano, while a ten-year-old girl wearing explosives was also discovered in Katsina state.

    The latest attack came on Wednesday when a female suicide bomber blew herself up at a college in Kano, killing six people. According to reports, the bomber was a female teenager.

Rescue workers collect clothes at the scene of the female suicide bomb attack outside the school in Kano, Nigeria, on Wednesday
Rescue workers collect clothes at the scene of the female suicide bomb attack outside the school in Kano, Nigeria, on Wednesday
  One was a 10-year-old girl who had an explosive belt strapped to her by the others, he said.
  Using female suicide bombers in the city appears to be a new tactic of Boko Haram, although they have used them on occasion for years in the northeast.
  Two female suicide bombers blew themselves up at a trade show and a petrol station in Kano on Monday, killing one other person and injuring at least six others. 

உங்கள் ஐபோன் விலை அதிகம் என்று நினைக்கிறீர்களா?...இதையும் சற்று பாருங்கள் ....

         முதன் முதலாக தயாரிக்கப்பட்ட ஆப்பிள்-1 கணினியானது நியூயார்க் நகரில் ஏலத்தில்    $ 905000 ($ 905000 = ₨ 55386000) விற்கப்பட்டுள்ளது ....




     One of the few remaining examples of Apple's first pre-assembled computer, the Apple-1, has been sold for $905,000 at an auction in New York, far outstripping expectations. Auction house Bonhams had said it expected to sell the machine, which was working as of September, for between $300,000 and $500,000.

     The relic, which sparked a revolution in home computing, is thought to be one of the first batch of 50 Apple-1 machines assembled by Apple co-founder Steve Wozniak in Steve Job's family garage in Los Altos, California in the summer of 1976.
    
One of the few remaining examples of Apple's first pre-assembled computer, the Apple 1, (pictured) has been sold for $905,000 at an auction in New York, far outstripping expectations 


புதன், அக்டோபர் 22, 2014

This Kind of Tea Lowers Blood Pressure Naturally-தேயிலை நீர் குடிப்பது இயற்கையாகவே இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

The best brew for your heart


     Recent research has come down squarely on the side of caffeinated morning beverages, suggesting that coffee can protect against cancer and type 2 diabetes. Tea has enjoyed a healthy reputation for years as a heart-protector, and a study published in the October issue of British Journal of Nutrition suggests it might even help lower blood pressure.
   
     Researchers were intrigued by the inconclusive link in studies so far regarding blood pressure and tea intake, so they analyzed 25 randomized controlled trials—the gold standard of scientific research—to further explore on the association.

     They found that in the short term, tea didn’t seem to make a difference for blood pressure. But long-term tea intake did have a significant impact. After 12 weeks of drinking tea, blood pressure was lower by 2.6 mmHg systolic and 2.2 mmHg diastolic. Green tea had the most significant results, while black tea performed the next best.



    Those might not seem like big numbers, but small changes in blood pressure can have a significant impact on health, the study authors write. Reducing systolic blood pressure by 2.6 mmHg “would be expected to reduce stroke risk by 8%, coronary artery disease mortality by 5% and all-cause mortality by 4% at a population level,” they write.

    Tea is thought to offer endothelial protection by helping blood vessels relax, allowing blood to flow more freely. It’s a high source of antioxidants that have been linked to better cardiovascular health.

    The researchers weren’t able to pinpoint the optimal number of cups to drink to get the benefit, but other studies have shown protective effects at 3-4 daily cups. The researchers said they didn’t see a difference in caffeinated tea vs. decaf.


    “These are profound effects and must be considered seriously in terms of the potential for dietary modification to modulate the risk of CVD [cardiovascular disease],” the authors write.

செவ்வாய், அக்டோபர் 21, 2014

ஞாயிறு, அக்டோபர் 19, 2014

Save our HEART & our LIFE-இதயம் காக்க 25 வழிகள்...

''நேத்துதான் நல்லாப் பேசிட்டு இருந்தார்... அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே...'' - நெருக்கமான நண்பர்கள் இப்படி வருத்தப்படுவதும், ''ஏற்கெனவே ரெண்டு அட்டாக் வந்திருக்கு. அதைக் கவனிக்காம விட்டிருக்கார். அதான், இப்படியாகிடிச்சு!'' என உறவுக்காரர்கள் விளக்கம் சொல்வதையும் பல இடங்களில் காதுபடக் கேட்டு இருக்கிறோம். திடீர் மரணங்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது மாரடைப்புதான். நமது நாட்டில் 25 முதல் 69 வயதினருக்கு இடையே ஏற்படும் மரணங்களில் 25 சதவிகிதம் மாரடைப்பால்தான் நிகழ்கின்றன. இதய நோய் வராமல் தடுக்கவும், வந்துவிட்ட நோயில் இருந்து நம்மை நாமே மீட்டெடுக்கவும் பிரான்டியர் லைஃப்லைன் மருத்துவமனையின் தலைவரும் கார்டியோ தொராசிக் நிபுணருமான டாக்டர் கே.எம்.செரியன் சொல்லும் வழிகள் இதோ...

http://archives.deccanchronicle.com/sites/default/files/styles/article_node_view/public/Dr-K-M-Cherian_0.jpg

மாரடைப்புக்கான காரணம்

உடல் முழுவதும் ரத்தம் பாய்ச்சும் அதிமுக்கிய வேலையைச் செய்வது நம் இதயம். 'லப் டப்’ தாள லயத்தோடு இதயம் துடித்து இயங்குவதால்தான், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் திசுக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இப்படி உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் இதயம் இயங்கவும் ரத்தம் தேவை. இதயத்துக்குத் தேவையான இந்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படும்போதுதான், மாரடைப்பு ஏற்படுகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதாலோ அல்லது ரத்தம் உறைந்துபோவதாலோ அடைப்பு ஏற்படலாம். இதனால், இதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் நிரம்பிய ரத்த ஓட்டம் தடைப்பட்டு, இதயத் தசைகள் செயல் இழக்கும். இதைத்தான் மாரடைப்பு என்கிறோம்.

மாரடைப்பைத் தவிர்க்க முடியும்!

1. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு, புகை பிடித்தல், உணவில் அதிகக் கொழுப்பு, உடல் உழைப்புக் குறைவு, மன அழுத்தம், மரபுரீதியாகக் குடும்பத்தில் யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டிருத்தல்.... என கொரனரி (இதய ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படும்) மாரடைப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. உங்கள் மருத்துவரை அணுகி உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை - கொழுப்பு அளவினைத் தொடர்ந்து பரிசோதனை செய்து, தேவைக்கு ஏற்ப மருத்துவச் சிகிச்சை பெற்றாலே, மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

2. குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துகொண்டால், மாரடைப்பு அபாயத்தை முன்கூட்டியே அறிந்து தடுக்க முடியும். ரத்த அழுத்தம் சராசரிக்கும் அதிகமாக இருந்தால், இந்தப் பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்வது நல்லது. சராசரி ரத்த அழுத்தம் என்பது (ஐடியல் பிளட் பிரஷர்) 130/80 எம்.எம்.எச்.ஜி-க்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

3. கொரனரி இதய நோய் வருவதற்கு சர்க்கரை நோய் ஒரு மிக முக்கியக் காரணம். எனவே, குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை கட்டாயம் சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

4. உங்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தால், உடனடியாக சர்க்கரை நோய் பரிசோதனை செய்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

5. குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும். மாரடைப்புக்கான காரணிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் கொழுப்புப் பரிசோதனையை டாக்டரின் ஆலோசனைப்படி அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும்.

உணவுப் பழக்கம்

6. மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்க, இதயத்துக்கு ஆரோக்கியம் தரும் உணவு அவசியம். கொழுப்பு, சர்க்கரை, உப்பு ஆகியவற்றின் அளவு குறைவாக இருக்கும் உணவுப் பொருட்களே இதயத்துக்கு நல்லது. அதிக அளவில் பழங்கள், பச்சைக் காய்கறிகள், தானியங்கள், கொழுப்பு குறைவான பால் பொருட்கள் போன்றவை மாரடைப்பு வராமல் தடுக்கும்.

7. குறைந்த கொழுப்பு மற்றும் அதிக அளவில் புரதச் சத்து நிறைந்த பீன்ஸ், மாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்கிறது. அசைவம் சாப்பிடுபவர்கள், 'ரெட் மீட்’ என்று சொல்லக் கூடிய ஆடு - மாடு போன்றவற்றின் இறைச்சியைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவற்றில் அதிக அளவு கொழுப்பு உள்ளது.

8. தோல் நீக்கிய கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவை ஆரோக்கியமானவை. ஆனாலும், அதிக அளவில் எண்ணெய்விட்டுப் பொரித்துச் சாப்பிடுவது தவறு.  முட்டையின் வெள்ளைப் பகுதியில் அதிகப் புரதச் சத்து உள்ளது. ஆனால், அதன் மஞ்சள் கரு அதிகக் கொழுப்பு மிக்கது. எனவே, முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்ப்பது மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கும்.

9. பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதில் அதிக அளவில் உப்பு உள்ளது. அது உயர்ரத்த அழுத்தத்தைத் தூண்டி விடும்.

10. அதிக அளவில் சர்க்கரை உள்ள உணவுப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். அந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டிவிடும். இதனால், அதிகப்படியாக உடல் எடையும் கூடும்.

11. 'ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட்’ மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. மேலும், இது உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். ஆளி விதை (Flax seed) எண்ணெய், வால்நெட் எண்ணெய், சோயாபீன் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றில் இந்த ஒமேகா-3-ஃபேட்டி ஆசிட் உள்ளது. சால்மன் போன்ற சில மீன் வகைகளிலும் இந்த ஒமேகா - 3-ஃபேட்டி ஆசிட் நிறைந்து உள்ளது.

12. சேச்சுரேட்டட் கொழுப்பு (Saturated fat) மற்றும் டிரான்ஸ் கொழுப்பு (Trans fat) ஆகியவை (ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பதன் மூலம்) கொரனரி மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும். அதனால், இவற்றையும் தவிர்க்க வேண்டும்.  

13. இறைச்சி, பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பனை எண்ணெய் ஆகியவற்றில் சேச்சுரேட்டட் கொழுப்பு அதிக அளவில் உள்ளது. பொரிக்கப்பட்ட துரித உணவுகள், பேக்கரி பொருட்கள், அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளில் அதிக அளவில் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

14. அதிக அளவில் மது அருந்துவது உடல்பருமனுக்கு வழிவகுக்கிறது. மேலும், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது. எனவே, மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி

15. ஒரு நாளைக்கு குறைந்தது 30 முதல் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொடர் உடற்பயிற்சிகள் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கின்றன. உங்களுக்குரிய ஆரோக்கியமான எடையை சரிவரப் பராமரியுங்கள். இதய நோய்களை ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம்; மன அழுத்தத்தைக் குறைக்கவும் உடற்பயிற்சி உதவும்.

16. தோட்டப் பராமரிப்பு, வீட்டு வேலைகள், மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, நடப்பதும் கூட நல்ல உடற்பயிற்சிதான். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் உடற்பயிற்சி செய்துகொண்டு இருக்க வேண்டும் என்று இல்லை. யோகா மற்றும் தியானப் பயிற்சி போன்றவை மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், மாரடைப்பு அபாயமும் குறையும்.

ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரித்தல்

17. உங்கள் உடல் எடை ஆரோக்கியமானதுதானா என்பதை பாடி மாஸ் இன்டெக்ஸ் மூலம் கணக்கிடலாம். பி.எம்.ஐ. புள்ளிகள் 25 அல்லது அதற்கு மேல் இருந்தால், உஷாராகிவிட வேண்டும்.

18. இடுப்பு அளவைக் கணக்கிடுவதால், வயிற்றுப் பகுதியில் எவ்வளவு கொழுப்பு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஆண்களுக்கு சராசரி இடுப்பு அளவு என்பது 40 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு 35 இன்ச் அளவுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.  

19. பெரியவர்களுக்கு உடல் எடை கூடுகிறது என்றால், அது பெரும்பாலும் தசை எடை கூடுதலாக இருக்காது, கொழுப்பு அதிகரிப்பாகத்தான் இருக்கும். அதிக அளவிலான உடல் எடை என்பது உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரிப்பது, சர்க்கரை நோய் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுப்பதுடன் மாரடைப்புக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

20. குறைந்த அளவிலான உடல் எடைக் குறைப்புகூட மிகப் பெரிய பலனை அளிக்கும். உங்கள் எடையை வெறும் 10 சதவீதம் குறையுங்கள், அது உங்கள் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், ரத்தத்தில் கொழுப்பு அளவையும் குறைத்து, சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

புகை பிடிக்காதீர்கள்

21. புகை பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துங்கள். மாரடைப்பு ஏற்பட மிக முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருப்பது புகையிலைப் பழக்கம். சிகரெட் புகையில் உள்ள நிகோடின் என்ற நச்சு ரத்தக் குழாயினை சுருக்கி, இதயத் துடிப்பு எண்ணிக்கை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் ஆக்சிஜனுக்கு மாற்றாகப் போய் உட்கார்ந்து கொள்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான போதுமான ஆக்சிஜன் கிடைப்பதற்காக (அதிகம் ரத்தம் செலுத்தும்படி) இதயம் கூடுதலாக வேலை செய்யவேண்டி இருக்கிறது. நீங்கள் புகைப்பதை நிறுத்தினால் அடுத்த ஓர் ஆண்டுக்குள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இதய நோய்க்கான வாய்ப்புகளும் குறைந்துவிடும். புகைப்பழக்கம் இல்லாத, ஆனால் ஒருவர் புகைத்துவிட்ட காற்றை சுவாசிப்பவருக்கும் கூட பாதிப்பு ஏற்படும். நீங்கள் புகைப்பதால், புகைப்பழக்கமே இல்லாத உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரும்கூட பாதிப்புக்கு ஆளாகின்றனர்.  

மருந்து-மாத்திரைகள்

22. உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிகக் கொழுப்பு போன்ற பிரச்னைகள் இருந்தால், டாக்டர்கள் பரிந்துரைத்திருக்கும் மருந்து-மாத்திரைகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களின் இதய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு பைபாஸ் அறுவைச் சிகிச்சை அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டும் என்று டாக்டர் பரிந்துரைத்தால், உடனடியாக அதைச் செய்து கொள்ளுங்கள். பயம் காரணமாகத் தள்ளிப் போடாதீர்கள்.

23. மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். மருத்துவமனைக்குச் செல்லும் முன் ஆஸ்பிரின் மாத்திரையைப் பயன்படுத்துங்கள். அது இதயத் தசைப் பாதிப்பைக் குறைக்கும்.

24. தொடர் மருத்துவப் பரிசோதனை, ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழ்நிலை, மாரடைப்புக்கான காரணிகளைக் கட்டுப்படுத்துவது போன்றவை நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும்.

பரிசோதனைகள்

25.  எளிய ஈ.சி.ஜி. பரிசோதனை மூலம் வலி இன்றி ஒருவரின் இதய மின் செயல்பாட்டைக் கண்டறிய முடியும். இது இதயம் எவ்வளவு வேகமாகத் துடிக்கிறது என்பதைக் காட்டும். இதயம் எந்தளவு பாதிக்கப்பட்டு உள்ளது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு உரிய சிகிச்சை அளித்தால், மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும்.

உடலில் எங்கு கொழுப்பு அதிகமாக உள்ளது என்பதைக் கண்டறிவது இப்போது எளிமை. சாதாரண சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தாலே, கொழுப்பு தோலுக்கு அடியில் உள்ளதா அல்லது வயிற்றுப் பகுதிகளில் உள்ளதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துவிட முடியும். இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் எவ்வளவு கொழுப்பு உள்ளது? எத்தனை ஆண்டுகளாக உள்ளது என்பதை 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும். எதிர்காலத்தில் ஒருவருக்குக் கொழுப்பு அடைப்பு ஏற்படுமா என்பதையும் துல்லியமாகச் சொல்லிவிட முடியும். ரத்தக் குழாயில் 0.5 மி.மீ. அளவுக்குக் கொழுப்பு படிந்திருந்தால் கூட, இந்தப் பரிசோதனை மூலம் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

சனி, அக்டோபர் 18, 2014

குடிநீர் பிரச்னை ...வருகிறது water ATMகள்!

Water A.T.M.S

மாதம் மும்மாரி பெய்த தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை என்று தவித்து வருகிறோம். ஆனால் இந்தியாவின் மிகப் பெரிய பாலைவன பூமியான ராஜஸ்தானில் இப்போது தண்ணீர் பிரச்னை அவ்வளவாக இல்லையாம்.  காரணம் வாட்டர் ஏ.டி.எம்., (water ATM) -கள்தான் என்கிறார்கள்.
முன்பெல்லாம் இந்தப் பகுதிகளில் தண்ணீர் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், அசுத்தமாகவும் குடிப்பதற்கு தகுதியற்றதாகவும் இருககும்.  ஆனால் இப்போது அப்பகுதி கிராமங்களில் தண்ணீர் பஞ்சமே இல்லை. 24 மணி நேரமும் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. அதற்கு காரணம் வாட்டர் ஏ.டி.எம்.தான் என குடித்து.... மன்னிக்கவும், அடித்து சொல்கிறார்கள். (water ATMs).
ஒரு காலத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வர் மாவட்டத்தின் பாகர்பூருக்குச் (Bhakharpur)  சென்று ஒரு டீ கடையில் டீ சொல்லிவிட்டு குடிக்கத் தண்ணீர் கேட்டால், அரை டம்ளர் தண்ணீர்தான் கொடுப்பார். டம்ளர் நிறைய தண்ணீர் கேட்டால், இன்னொரு டீ வேண்டுமானாலும் ஃபிரீயா தருகிறேன் தண்ணீர் மட்டும் கேட்காதீங்க என்பார்கள். அந்த அளவுக்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடியதுண்டு இங்கு.  மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களிலும் இதே நிலைமைதான்.
ஆனால் இப்போதோ  பாகர்பூர் கிரமத்தில் 5 ரூபாய்கு 20 லிட்டர் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. ராஜஸ்தான் பப்ளிக் ஹெல்த் இன்ஜினீரிங்  துறையும் கேர்ன் நிறுவனமும் (இந்தியன் ஆயில் & கேஸ் கம்பனி) சேர்ந்து, ஆர்.ஓ ( Reverse Osmosis)  வாட்டர் பிளான்ட் மூலமாக சுத்தமான தண்ணீர் சப்ளை செய்கிறது. இந்த திட்டத்துக்கு 'ஜீவன் அம்ருத்'  (Jeevan Amrit ) என்று பெயர். இதன் சிறப்பு ஏ.டி.எம்.மையங்களில் இருந்து தண்ணீர் பெறமுடியும்.
இத்திட்டத்தின்படி பயனடைய வாட்டர் ஏ.டி.எம். கார்டு'களை 150 ரூபாய் செலுத்தி பெற்றுகொள்ளவேண்டும். அதே தொகைக்கு ரீசார்ஜ் செய்தபிறகு இந்த கார்ட்டை பயன்படுத்தலாம். குறைந்த பட்சம் 20 ரூபாய்க்கும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த வார்ட்டர் கார்டுகள் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானம் கிராம நிர்வாகத்தின் மூலம் ஆர்வோ வாட்டர் பிளான்ட் ஊழியர்களுக்கும், ஏ.டி.எம்., ஆப்ரேட்டர்களுக்கும் மாத சம்பளமாகத் தரப்படுகிறது. மீதம் இருந்தால், கிராம நிர்வாகத்துக்குச் சேரும்.
''ஒரு நேரத்தில் எங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் தண்ணீருக்காக பல மைல்கள் நடந்து சென்று தண்ணீர் கொண்டுவருவார்கள். தண்ணீர் கிடைத்தாலும் அது சுத்தமானதாக இருக்காது. ஒருவேளை தண்ணீர் லாரி வந்தால் தண்ணீர் பிடிக்கும் போட்டியில் சண்டை போட்டுக்கொள்வார்கள். எங்க ஊரில் பாதி சண்டை தண்ணீர்க்காகவே நடந்ததாக இருக்கும்.  இப்போது ஏ.டி.எம். மூலம் சுத்தமான தண்ணீர் கிடைப்பதோடு, உடல் ஆரோக்கியமாகவும் இருக்கிறது என்கிறார் பாகர்பூர் கிராமவாசி ஒருவர்.

24 மணி நேரமும் சுத்தமான தண்ணீர் சப்ளை செய்யும்  இந்த 'ஜீவன் அம்ருத்' திட்டத்தை இன்னும் பல கிராமங்களில் விரிவு படுத்த ராஜஸ்தான் பப்ளிக் ஹெல்த் இன்ஜினீரிங் டிப்பார்ட்மெண்ட் திட்டம் தீட்டி வருகிறது. ராஜஸ்தான் உட்பட பல மாநிலங்களில் மேலும்  பல தண்ணீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.  ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் உள்ள பல பகுதிகளில் 'பரிமல் பவுன்டேஷன்' நவீன விஞ்ஞான முறையில் சுத்தமான தண்ணீர் ஏ.டி.எம்-கள் மூலம் சப்ளை செய்துவருகிறது. இந்த திட்டத்திற்கு 'சர்வஜல்' என்று பெயர்.

ஹிமாச்சல் பிரதேஷ் தலை நகர் சிம்லாவில் தற்போது வாட்டர் ஏ.டி.எம்.கள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் 50 பைசாவுக்கு 1 லிட்டர் சுத்தமான நீர் கிடைக்கிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து விரிவுபடுத்த அரசாங்கம் யோசித்து வருகிறது. டெல்லியில் வாட்டர் ஏ.டி.எம்கள் திறக்கப்பட்டுள்ளன. டெல்லி அரசாங்கமும் வாட்டர் ஏ.டி.எம்களைத் திறக்க திட்டமிட்டுள்ளது.

போகிறபோக்கைப் பார்த்தால் நாடு முழுக்க பணம் எடுக்கும் வங்கி ஏ.டி.எம்களுக்கு இணையாக வாட்டர் ஏ.டி.எம் வந்துவிடும்போல் இருக்கிறது. எது எப்படியோ ஏடிஎம்களிலிருந்து எடுக்கும் தண்ணீரை பணம் போல(!?) மக்கள் செலவு செய்யாமல் இருந்தால் சரி!

-என்.மல்லிகார்ஜுனா,  கே.ஆர். ராஜமாணிக்கம்

-Courtesy-Vikatan.

வெள்ளி, அக்டோபர் 17, 2014

ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...!

ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்

‘கிச்சனைப் பார்த்தால் அந்த ஹோட்டலில் சாப்பிட முடியாது!’ என்பார்கள். சென்னையில் உள்ள சில ஹோட்டல்களில் சமையல்காரராகப் பணியாற்றிய அனுபவம் மிக்க ஒருவர், அளித்த அதிர்ச்சித் தகவல்கள் இங்கே...
‘‘பொதுவாக ஹோட்டல்களில் ஒருநாளைக்கு 150 கிலோ மட்டன் வாங்கப்படுகிறது என்றால், அதில் 100 கிலோ பயன்படுத்தப்பட்டால், மீதம் இருக்கும் 50 கிலோ, மதியம் வரை ரூம் டெம்ப்பரேச்சரிலேயே இருக்கும். ஃப்ரீஸரில் வைத்தால் மீண்டும் தேவைக்கு எடுக்கும்போது அது இறுகிப்போயிருக்கும், பின் அதை சமைக்கத் தாமதமாகும் என்பதால், அதை வெளியிலேயே வைத்திருப்பார்கள். பின் ‘லன்ச் அவர்’ முடிந்து, இனி அதன் தேவை இல்லை என்ற பின்தான் அது ஃபிரீஸரில் வைக்கப்படும். அதற்குள்ளாக அது சிதைய ஆரம்பித்திருக்கும். பின் இரவு டின்னருக்கோ அல்லது மறுநாள் லன்ச் அவருக்கோ மீண்டும் அந்த மட்டனே பயன்படுத்தப்படும். எனவே, பெரும்பாலான ஹோட்டல்களில் நீங்கள் சாப்பிடும் மட்டன், சிக்கன் ஃப்ரெஷ் அசைவம் இல்லை.

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் பற்றி இப்போது பலரும் அறிந்துள்ளார்கள். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது என்றாலும், அதுதான் பெரும்பாலான ஹோட்டல்களில் நடக்கிறது. வறுத்த மீன், சிக்கன் 65 எல்லாம் அலங்காரமாக பிளேட்டில் வைக்கப்பட்டு உங்கள் டேபிளில் பரிமாறப்படும்போது, அவை சமைக்கப்பட்டது பல முறை சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில் என்பது நினைவில் வரட்டும்.
வீட்டில் அசைவம் சமைக்கும்போது, அதை நன்றாக கழுவுவது வழக்கம். ஆனால் அந்த அக்கறையையும், நுட்பத்தையும் ஹோட்டல்களில் எதிர்பார்க்க முடியாது. ஆட்டுக் குடல், மீன், இறால்... இவையெல்லாம் பெயருக்கே கழுவப்படும்.

வீட்டில் கீரையை மண் நீக்கி அலசி, உருளைக் கிழங்கை கழுவி வேக வைத்து, இஞ்சியை தோல் நீக்கி, கத்திரிக்காயை புழு நீக்கி வெட்டி, காலிஃபிளவரை உப்பு, மஞ்சள் தூள் கலந்த சுடுநீரில் ஒருமுறை மூழ்க வைத்து எடுத்து என்று... அக்கறையாகச் செய்வோம். இவ்வளவு துல்லியமாக சுத்தம் செய்துகொண்டிருந்தால், 11 மணிக்கு எப்படி டேபிளில் இலை போட முடியும் ஹோட்டல்களில்? எனவே, குழாய் தண்ணீரில் ஒருமுறை அலசுவதே அவர்கள் ‘சுத்தம்’ செய்யும் முறை. குறிப்பாக, தற்போது பூச்சிக்கொல்லிகளின் பலனால், பச்சைக் காய்கறிகள் 60% கெமிக்கல் கலந்தே நமக்குக் கிடைக்கின்றன. எனவே, அவற்றை வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை கழுவிய பின் பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது. அப்படியிருக்க, ஹோட்டல் காய்கறி சமையலின் ஆரோக்கியத்தை சொல்லத் தேவையில்லை.
வெளியே சென்றாலோ, வெளியூர் சென்றாலோ ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்ற கலாச்சாரத்தை பின்பற்றாமல், வீட்டில் இருந்து சமைத்து எடுத்துச் செல்லப் பழக்குங்கள். என்றாவது ஒரு நாள் ஹோட்டல்களில் சாப்பிடலாம், தவறில்லை. அதிலும் அசைவம் தவிர்த்து சைவமாகச் சாப்பிடுவது நலம். குழந்தைகளை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும்போது சைவ உணவு, சாலட், ஃப்ரெஷ் ஜூஸ் போன்றவற்றை வாங்கிக் கொடுங்கள். அதிக தீங்கு தராத உணவுகள் இவை. ஹோட்டலில் சாப்பிட்ட நாளில் அஜீரணம், அதிகமான தண்ணீர் தாகம், நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், மயக்கம் வருவது போன்ற உணர்வு, வாந்தி போன்றவை ஏற்பட்டால், மீண்டும் அந்த ஹோட்டல் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள்!’’   என்கிறார் எச்சரிக்கையோடு!

- ம.பிரியதர்ஷினி

Courtesy-Vikatan

ஞாயிறு, அக்டோபர் 12, 2014

விளையாடிக்கொண்டிருக்கின்றது....




ஒளித்து வைத்திருந்த
ஒளியை
ஓங்காரமாய்
ஒளிவிட
வைத்த
வையம் தான்
தன்னில் பாதியை
ஒளித்து
ஒளிந்து ஒளிந்து
விளையாடிக்கொண்டிருக்கின்றது
சூரியனிடம்....

-சேதுராமன் ராமலிங்கம் ,ஜெயங்கொண்டம்.

புதன், அக்டோபர் 08, 2014

கொழுப்பைக் குறைக்கிறேன்........

``கொழுப்பைக் குறைக் கிறேன் என்று இடைவிடாமல் உடற்பயிற்சி, நடைப்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டும போதாது. உண்ணும் உணவிலும் கட்டுப்பாடு அவசியம். உணவின் மூலம் தேவையற்ற கொழுப்பைக் குறைத்து... உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்” என்று சொல்லும் உணவு ஆலோசகர் யசோதரை கருணாகரன், கொலஸ்ட்ராலைக் குறைக்கும் சில உணவுகளைச் செய்து நமக்காக வழங்கியிருக்கிறார்.
‘‘உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகளுக்கு கொலஸ்ட்ரால் அவசியம். கல்லீரலில் இருந்து கொலஸ்ட்ராலை உடலில் உள்ள செல்களுக்கு எடுத்துச் செல்வது எல்.டி.எல் (Low Density Lipo protein). செல்களுக்குத் தேவைப்படாத அதிகப்படியான கொலஸ்ட்ராலைத் திரும்பவும் கல்லீரலுக்கே எடுத்துச் செல்வது எச்.டி.எல் (High Density Lipo protein). எச்.டி.எல்-ஐ நல்ல கொழுப்பு என்றும், எல்.டி.எல்-ஐ கெட்ட கொழுப்பு என்றும் சொல்கிறோம்.
உடலில் அதிகமான கொலஸ்ட்ரால் சேமிப்பைத் தடுக்க ஒரே வழி, எச்.டி.எல் அளவை உயர்த்துவதுதான். புகை பிடித்தலைத் தவிர்த்தல், உடல் எடையைக் குறைத்தல், ஒமேகா 3-யை உணவில்  அதிகம் சேர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் எச்.டி.எல் கொழுப்பை உயர்த்தலாம்.  எல்.டி.எல்-ஐ அதிகரிக்கச் செய்யும் கொழுப்புச் சத்துக்கள் அடங்கிய உணவு வகைகளைத் தவிர்த்து, எச்.டி.எல் அளவை உயர்த்த உதவும் ஒமேகா 3 அடங்கிய உணவுகள், நார்ச்சத்து உணவுகள், வைட்டமின் சி மற்றும் தயாமின் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்டுவந்தாலே கொலஸ்ட்ராலை எளிதில் குறைத்துவிடலாம்.  உடல் உழைப்புக்காக, நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, உடற்பயிற்சிகளை நம் அன்றாட வாழ்வின் கடமையாக மேற்கொள்ளுதல் ஒன்றே, ஆரோக்கியத்துக்கான சிறந்த வழி.”
 முளைப்பயறு சோயா கிரேவி
தேவையானவை: முளைக்கட்டிய பாசிப்பயறு - 75 கிராம், சோயா உருண்டைகள் - 2 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 1 அல்லது 2, தக்காளி - 1, தனியா தூள், சீரகம், இஞ்சி பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், புதினா - ஒரு பிடி, வரமிளகாய் - 3, மிளகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், மல்லித்தழை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைக் கட்டிய பயறை மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். சிறிது எண்ணெயைக் காயவைத்து மிளகு, சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுக்கவும். தக்காளியை நறுக்கி, அரைத்துக்  கொள்ளவும். மீதி எண்ணெயில், பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினாவைப் போட்டு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக்கொள்ளவும். வறுத்த பொருட்கள், வதக்கிய கலவை இவற்றுடன் மல்லித்தழை சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வேகவைத்த பாசிப்பயறில், அரைத்த விழுது, தனியா தூள், அரைத்த தக்காளி, தேவையான உப்பு மற்றும் தண்ணீர் விட்டு, இரண்டு கொதி கொதிக்கவிடவும்.
சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு, 5 நிமிடங்களுக்குப் பிறகு, நன்கு பிழிந்துஎடுத்து, பயறு குழம்பில் போடவும். கிரேவி பதத்தில் வந்ததும் இறக்கவும். சப்பாத்திக்கு நல்ல சைடு டிஷ் இது.
பயன்கள்: முளைக்கட்டிய பயறில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் கரையும் நார்ச்சத்து உள்ளன. வைட்டமின் சி, கொலஸ்ட்ராலை உயர்த்தும், செம்பு மற்றும் துத்தநாக சத்துக்களின் அளவைக் கட்டுப்படுத்தும். சோயா பீன்சில் ஒமேகா 3 அதிகமாக உள்ளது. வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி - இவற்றில் நார்ச்சத்து அடங்கியுள்ளது. நல்லெண்ணெய், ரத்த நாளங்களில் கொழுப்பு  சேர்வதைத் தடுக்கிறது.
 வெந்தயக் கீரை சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சோயா மாவு - 2 டேபிள்ஸ்பூன், வெந்தயக் கீரை - முக்கால் கப், மிளகாய்தூள் - கால் டீஸ்பூன், ஆலிவ் ஆயில் - அரை டீஸ்பூன், உப்பு, அரிசி தவிட்டு எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கால் டீஸ்பூன் அரிசி தவிட்டு எண்ணெயில், பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையைச் சேர்த்து வதக்கி, இறக்கும்போது, மிளகாய்தூள் சேர்த்து மேலும் வதக்கி இறக்கவும். கோதுமை மாவில் எல்லாப் பொருட்களையும் சேர்த்து, வெதுவெதுப்பான நீர்விட்டு, சப்பாத்தி மாவு பிசைந்துவைக்கவும். ஆலிவ் ஆயிலை, சப்பாத்தி மாவு பிசையும்போது சேர்க்காமல், சப்பாத்தியை இடும்போது, நடுவில் 2, 3 சொட்டு விட்டு தடவி, மீண்டும் மடித்துத் தேய்க்க வேண்டும். தோசை கல்லில், எண்ணெய் சேர்க்காமல் சப்பாத்திகளைச் சுட்டு எடுக்கவும்.
பயன்கள்: சோயா மாவு மற்றும் வெந்தயக் கீரையில் ஒமேகா 3 அடங்கி உள்ளது. வெந்தயக் கீரை, மீன் எண்ணெய்க்குச் சமம். ஆலிவ் ஆயிலிலும் ஒமேகா 3 உள்ளது. இந்தச் சப்பாத்தியில், அதிகப் புரதமும் நார்ச்சத்தும் வைட்டமின் ஏ சத்தும் இருக்கிறது. இவை எல்லாமே கொலஸ்ட்ராலைக் குறைக்கப் பெரிதும் உதவும்.  
 சிறுதானிய ஓட்ஸ் இட்லி
தேவையானவை: தினை அரிசி, இட்லி அரிசி - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், ஓட்ஸ் - 30 கிராம், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தினை அரிசி, இட்லி அரிசி இரண்டையும் ஒன்றாகவும், உளுத்தம் பருப்பைத் தனியாகவும் ஊறவைத்து, இட்லிக்கு அரைப்பது போல அரைத்து, உப்பு சேர்த்துப் புளிக்கவைக்கவும். மறுநாள் காலை, ஓட்ஸ், சீரகம், மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றை கரகரப்பாக அரைத்து, இட்லி மாவில் கலந்து, இட்லிகளாக வார்த்து, வேகவைத்து எடுக்கவும். இதற்கு, தக்காளி சட்னி ருசியாக இருக்கும்.
பயன்கள்: ஓட்ஸில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட், ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் சேமிப்பைத் தவிர்க்கும். கொழுப்பு சேர்ந்தவர்களுக்கு, தினை அரிசி ஒரு வரப்பிரசாதமாகும். இட்லி மாவைப் புளிக்கச் செய்வதன் மூலம், புரோபயாட்டிக்ஸ் உற்பத்தியாகும். இது, குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கச் செய்யும்.
 வாழைப்பூ அடை
தேவையானவை: குதிரைவாலி அரிசி - 100 கிராம், மைசூர் பருப்பு - 30 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், முளைக்கட்டிய பாசிப்பயறு - 25 கிராம், வாழைப்பூ - முக்கால் கப், பெரிய வெங்காயம் - 1, வரமிளகாய் - 4 அல்லது 5, மல்லித்தழை - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, அரிசி தவிட்டு எண்ணெய், இந்துப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும். எல்லா வகைப் பயறு, பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக தண்ணீரில் ஊறவைக்கவும். வெங்காயம், மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, உப்பு, வரமிளகாயை அரைத்து, இதனுடன் ஊறவைத்த பருப்பு வகைகளையும் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவில், பொடியாக நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் தடவி அடைகளாக வார்க்கவும். மூடி போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
பயன்கள்: குதிரைவாலி, முளைக்கட்டிய பயறு ஆகியவை கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். மைசூர் பருப்பு, அடை மிருதுவாக இருக்க உதவுவதோடு, புரதம் மற்றும் இரும்புச் சத்தைத் தரும். வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியில் உள்ள நார்ச்சத்து, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவியாக இருக்கும்.


---நன்றி விகடன்