Translate

சனி, நவம்பர் 01, 2014

இதயத்தைக்காக்கும் காளான் -Mushroom Saves our life [HEART]...

காளானின்  மருத்துவ குணங்கள்:

   
  •   மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து-         D காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம்.


  • நோய் எதிர்ப்பு சக்தியை  சிறிது சிறிதாக  நம் உடலில் அதிகரிக்கச்செய்யும். 


  • உயிர்ச்சத்து- B காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம்.



  •  ஆண்டி ஆக்சிடென்ட்ஸ் நிறைய உள்ளது. 


  • கொழுப்பு என்பது சிறிதளவும் கிடையாது 



  • இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். மேலும் காளானில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. 


  •   தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. 

  • மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். காளான்களை பக்குவப்படுத்தி பல்வேறு விதமான உணவு வகைகளாகத் தயாரித்து உண்ணலாம். அவை, நமது உடலுக்கு சக்தியைத் தருவதோடு புரதம், வைட்டமின்கள்,தாதுப்பொருள்களை அளிக்கிறது.
  
  • காளான், சர்க்கரை நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில், கொழுப்புச் சத்து மிக, மிகக் குறைவு. எனவே, தற்போதுள்ள தட்ப, வெட்ப சூழ்நிலையின் காரணமாக, அனைவருமே காளானை உள்கொண்டால், நோயின்றி நீண்ட நாள் வாழலாம்.

 இதயத்தைக்காக்கும் காளான்
  • காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
  • இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.
  • இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
  • சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.
  • இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கிஉள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
  • மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
  • 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.
  • எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.

  • காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து உண்டு  வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.
  • காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் 

       பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது
  • பாக்டீரியா நோய்கள், பூஞ்சாண நோய்கள், புற்று நோய்கள், இன்புளுயன்ஸô  காய்ச்சல், சுரப்பிகளின் வீக்கம், நரம்புக் கோளாறு, காக்காய் வலிப்பு, மூளை நோய், வலிமை குறைவு, முதுமை குறைவு,காய்ச்சல். நீரிழிவு நோய், எய்ட்ஸ், பேதி, பித்த சுரப்பி கோளாறு நோய்கள், குடல் கோளாறு, காது வலி, மஞ்சள் காமாலை, மூட்டு வலி, நீர்க்கோர்த்தல் உள்ளிட்ட நோய்களைக் காளான் கட்டுப்படுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக