Translate

ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

வெள்ளிப்பதக்கம் வென்றார் சுஷில்குமார்; இந்தியாவுக்கு 6வது பதக்கம்-Sushil Kumar settles for silver but creates history


லண்டன்: ஒலிம்பிக்போட்டி நிறைபெறும் இன்று 66 கிலோ ஆண்கள் ப்ரீஸ்டைல் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுஷில் குமார் வெள்ளி பதக்கம் வென்றார்.இறுதிப்போட்டியில் அவர் போராடி தோல்வியந்தார்.சுஷில்குமார் கடந்த 2008-ம் ஆண்டு பீய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று 66 கி..கி. எடைப்பிரிவில் நடந்த காலிறுதியில் உஸ்பெஸ்கிஸ்தான் வீரர் இக்தியோர் நூர்ஸோவை 3-1 புள்ளி கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

விறுவிறுப்பான அரையிறுதி பலப்பரீட்சையில், சுஷில்குமார் கஜகஸ்தான் வீரர் டனடரேவுடன் மோதினார். இதில் 3-0, 03, 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். கடும் சவாலுடன் விளையாடி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

சுஷில்குமார் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதும் தங்கம் வெல்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். தங்கம் வெல்ல வேண்டும் என இந்தியா முழுவதும் பிரார்த்தனை நடந்தது. தங்கப் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இறுதி போட்டியில் சுஷில் குமார், ஜப்பானின் டாட்சுகிரோ யோனேமிட்சூவை எதிர்கொண்டார். இதில் சுஷில் குமார் 2-4 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார். இதையடுத்து அவர் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சுஷில் குமார், தற்போது வெள்ளி பதக்கம் கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 6 பதக்கங்களை வென்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக